ராணி எலிசபெத்தின் இறப்புச் சான்றிதழ் வெளியீடு: இறுதி நிமிடங்களில் உடனிருந்த இளவரசி அன்னே நெகிழ்ச்சி
பிரித்தானிய மகாராணியின் இறப்புச் சான்றிதழை வெளியிட்டது ஸ்காட்லாந்து நேஷனல் ரெக்கார்ட்ஸ்.
ராணியின் கடைசி 24 மணி நேரத்தை பகிர்ந்து கொண்டதால் நான் அதிர்ஷ்டசாலி என இளவரசி அன்னே தகவல்.
பிரித்தானிய மகாராணியின் இறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ள நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்கான காரணம் மற்றும் அவர் உயிரிழந்த துல்லியமான நேரம் ஆகியவை தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவை சுமார் 70 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது இறப்பு சான்றிதழை ஸ்காட்லாந்தின் நேஷனல் ரெக்கார்டு(National Records of Scotland) வெளியிட்டுள்ளது.
SKY
இதில் ராணியின் மரணத்திற்கான காரணம் மற்றும் ராணியாரின் இறுதி நிமிடங்கள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்து நேஷனல் ரெக்கார்டு வெளியிட்ட ஆவணத்தில், ராணி செப்டம்பர் 8ம் திகதி வியாழக்கிழமை மாலை 3:10 மணிக்கு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
GETTY
மேலும் பிரித்தானிய மகாராணியின் இறுதி நிமிடங்களில் அவரது மகள் மற்றும் இளவரசியாகி அன்னே (Anne) உடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சில நாடுகளின் தலையீடு இல்லாமல் பைப்லைன் தாக்குதல் சாத்தியமற்றது: ரஷ்யா குற்றச்சாட்டு
அத்துடன் பால்மோரலில் இருந்து எடின்பர்க் வழியாக லண்டனுக்குப் பயணித்தபோது, தனது தாயின் சவப்பெட்டியுடன் சென்ற அன்னே, எனது அன்பான தாயின் வாழ்க்கையின் கடைசி 24 மணி நேரத்தை பகிர்ந்து கொண்டதால் நான் அதிர்ஷ்டசாலி என தெரிவித்துள்ளார்.