இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy
இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானியாவின் F-35B போர் விமானத்திற்கு ஏர் இந்தியா வழங்கிய சலுகையை Royal Navy மறுத்துள்ளது.
இந்தியாவில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 6 நாட்களாக பிரித்தானியாவின் உயர் தொழில்நுட்ப F-35B Lightning II ஸ்டெல்த் போர் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த உள்ளே நகர்த்தீவைக்க, ஏர் இந்தியாவின் (Air India) ஹேங்கர் வசதியை பயன்படுத்தும் முன்முயற்சியை பிரித்தானிய கடற்படை (Royal Navy) நிராகரித்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஏன் இந்த நிராகரிப்பு?
இந்த அமெரிக்க வம்சாவளியிலான F-35B விமானம், உலகிலேயே மிகவும் பராமரிப்பு செலவு உயர்ந்த விமானமாகும்.
அதில் உள்ள பாதுகாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை வெளிநாட்டு கண்களுக்கு காட்ட விரும்பாததே இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம்.
நிலைமை என்ன?
இந்த விமானம் HMS Prince of Wales என்ற விமானம் ஏற்றுச் செல்லும் கப்பலின் ஒரு பகுதியாக, இந்தியா-பசிபிக் பகுதிக்கான கடற்படை பயிற்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது.
ஆனால், இங்கிலாந்து கடற்கரையிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் இருந்து புறப்பட்டு வந்தபோது, திடீரென எரிபொருள் குறைவால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக இறங்கியது.

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு
விமானத்தின் ஹைட்ராலிக் அமைப்பில் தொழில்நுட்ப குறைபாடுகள் உள்ளதாகத் தெரிய வந்ததால், பிரித்தானிய தொழில்நுட்ப நிபுணர்கள் இடத்தில் இருப்பதுடன், இந்திய விமானப்படை தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.
விமானத்தை ஹேங்கரில் கொண்டு செல்ல முடிவெடுக்கப்படாமல் உள்ளதால், அது கடுமையான பாதுகாப்பு வலையுடன் வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
F-35B emergency landing India, UK stealth jet in Thiruvananthapuram, Air India hangar offer declined, Royal Navy fighter jet India, HMS Prince of Wales F-35B, F-35B Kerala security concern, Thiruvananthapuram F-35B update, F-35B hydraulic issue India, British jet parked in Kerala, Indo-Pacific UK naval exercises