12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...
பிரித்தானியா, 12 புதிய அணுசக்தி அடிப்படையிலான தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்களை (attack submarines) உருவாக்கும் பாரிய திட்டத்தை அறிவித்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று வெளியிடும் புதிய பாதுகாப்பு ஆய்வில் இந்தத் திட்டம் இடம்பெற உள்ளது.
இவை அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் கூடிய கூட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளன.
இந்த நீர்மூழ்கி கப்பல்கள், 2030-களில் பழைய கப்பல்களை மாற்றுவதற்காக பயன்படுத்தப்படும்.
வேலைவாய்ப்புகள்
இந்த திட்டம் மூலம் 30,000 உயர் நுட்ப வேலைவாய்ப்புகள், 30,000 பயிற்சி இடங்கள் (apprenticeships) மற்றும் 14,000 பட்டதாரி வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Cohort நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான Andy Thomis, இது மிகவும் முக்கியமான திட்டம் என்றும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய முதலீடுகள் அவசியம் என்றும் கூறியுள்ளார்.

அணுகுண்டு ஏவுதிறன் கொண்ட போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டம் - பாதுகாப்பை விரிவாக்க நடவடிக்கை
பாதுகாப்பு செலவுகளுக்கு அழுத்தம்
அதேநேரம், இந்த திட்டம் பிரித்தானியாவின் GDP-யின் 2.5 சதவீதம் அல்லது 3 சதவீத செலவுக்குள் நிறைவேற்றுவது என்பது சவாலாக இருக்கும், ஆனால் இது தேசிய பாதுகாப்பிற்கு தேவை என Thomis கூறியுள்ளார
ரஷ்ய அச்சுறுத்தலுக்கு பதிலடி
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் John Healey, "இவை ரஷ்யாவின் செயல்களை எதிர்த்து நம்மை பாதுகாக்கும்" என்றும், "புதிய உள்நாட்டு அணுஆயுத திட்டத்திற்கும் £15 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK attack submarines plan, UK defence investment 2025, Keir Starmer submarine announcement, UK jobs from submarine program, British nuclear powered submarines, UK-US-Australia submarine alliance, Defence spending UK 3 percent GDP, Russia UK submarine threat, UK nuclear warhead investment, Cohort defence submarine reaction