1.5 பில்லியன் பவுண்டு செலவில் புதிதாக 6 ஆயுத தொழிற்சாலைகள் கட்டும் பிரித்தானியா
பிரித்தானியாவில் ஆறு புதிய ஆயுத தொழிற்சாலைகள் கட்டப்படவுள்ளன.
பிரித்தானிய அரசு நாட்டின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் நோக்கில், 1.5 பில்லியன் பவுண்டு செலவில் 6 புதிய ஆயுத மற்றும் வெடிமருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த முதலீடு, வரும் 10 ஆண்டுகளுக்கான Strategic Defence Review (SDR) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
முழுமையான SDR அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டிலேயே 7,000 long-range ஆயுதங்களை உருவாக்கும் திட்டமும் இந்த புதிய திட்டத்தில் அடங்கும்.
இந்த புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆயுத உற்பத்தி திட்டம் மூலம் சுமார் 1,800 வேலை வாய்ப்புகள் உருவாகும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி, "உக்ரைனில் நடக்கும் போர் நமக்கு ஒரு உண்மையை உணர்த்தியது - ஒரு ராணுவத்தின் வலிமை அதன் தொழில்துறையின் ஆதாரத்தில்தான் இருக்கிறது. இப்போது நாம் எதிரிகளை தடுக்கும் வகையில் நமது தொழில் அடித்தளத்தை பலப்படுத்துகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
இதுடன் கூடுதலாக, தற்போதைய நாடாளுமன்ற காலத்தில் மட்டும் பிரித்தானியா சுமார் £6 பில்லியனை குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீது செலவிடும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ராணுவத்தினருக்கான வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிக்காக கூடுதலாக £1.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK weapons factories 2025, British defence investment, UK Strategic Defence Review, John Healey defence statement, 1.5bn pounds UK weapons project, UK military job creation, British munitions production, UK long-range weapons deal, MoD UK latest announcement, UK army housing upgrade