ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு - இராணுவத்தை சக்திவாய்ந்ததாக்க மாற்றும் பிரித்தானியா
பிரித்தானிய அரசு ட்ரோன் தொழில்நுட்பத்தில் 2 பில்லியன் பவுண்டு முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இராணுவத்தை 10 மடங்கு அதிக தாக்குதல் திறன்கொண்டதாக மாற்றுவதற்காக 2 பில்லியன் பவுண்டு தொகையை ட்ரோன் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் திட்டத்தை பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம், உக்ரைனில் நடக்கும் போரில் உருவான நவீன ஆயுத உத்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை இணைத்து, புதிய ட்ரோன் மையத்தை அமைப்பதையும், நாட்டு பாதுகாப்பை மேம்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளது.
“ட்ரோன்கள், செயறக்கை நுண்ணறைவு (AI) மற்றும் பாரிய ஆயுதங்கள் இணைந்து ராணுவத்தை பத்து மடங்கு தாக்கம் கொண்டதாக மாற்றும்.” என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலி கூறியுள்ளார்.
போர்க்களத்தில் ட்ரோன்களின் தாக்கம்
ட்ரோன்கள் தற்போது யுத்தப் பரப்புகளில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
உக்ரைனில், இரண்டு தரப்பும் ட்ரோன்களை தாக்குதல்களுக்கும் புலனாய்விற்கும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றன.
70 சதவீத உயிரிழப்புகள் ட்ரோன் தாக்குதல்களால் ஏற்படுகின்றன என கணிக்கப்பட்டுள்ளது.

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...
பிரித்தானியாவில் வெளியான பாதுகாப்பு மதிப்பீடு, தாக்குதல் ட்ரோன்கள், கண்காணிப்பு கருவிகள் மற்றும் எதிர்-ட்ரோன் பாதுகாப்பு ஆகியவற்றில் விரிவான முதலீடு அவசியம் என வலியுறுத்துகிறது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், “பிரித்தானியா போருக்கு தயாராக இருக்க வேண்டும். இது நம்மை பாதுகாக்கும் பொறுப்பு,” என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலுப்படுத்தும் பிரித்தானியாவின் பிற நடவடிக்கைகள்:
15 பில்லியன் பவுண்டுகள் செலவில் புதிய நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் 12 தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பிற்காக 1 பில்லியன் பவுண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.
6 ஆயுத தொழிற்சாலைகள் திறக்கப்படவுள்ளன.
Home Guard அமைப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |