செல்லப்பிராணியால் கைகால்களை இழந்த பெண்
பிரித்தானியாவில் வாழும் பெண்ணொருவர், தான் வளர்த்த செல்ல நாய் தனது காலிலிருந்த காயம் ஒன்றை நக்கியதைத் தொடர்ந்து மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளார்.
செல்லப்பிராணியால் கைகால்களை இழந்த பெண்
ஜூலை மாதம் 14ஆம் திகதி, வேலையிலிருந்து வீடு திரும்பிய மன்ஜீத்துக்கு (56) உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள உணர்வு ஏற்பட்டுள்ளது.

மறுநாள் மன்ஜீத்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், அவரது உதடுகள் நீல நிறமாக, கைகால்கள் உறைந்துவிட்டதுபோல் உணர, உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார் அவரது கணவரான Kam Sangha.
மருத்துவமனையில் மன்ஜீத்தின் இதயம் ஆறு முறை நின்றுள்ளது, அவரது இரண்டு கைகளையும், கால்களையும் மருத்துவர்கள் அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, அவரது மண்ணீரல் நீக்கப்பட்டுள்ளது, நிமோனியா, பித்தப்பை கற்கள் என பல்வேறு பிரச்சினைகளுடன், மன்ஜீத் 32 வாரங்கள் மருத்துவமனையில் செலவிடவேண்டியிருந்துள்ளது.
என்ன நடந்தது?
இவ்வளவுக்கும் காரணம், மன்ஜீத் வளர்க்கும் நாய், அவரது காலிலிருந்த காயம் ஒன்றை நக்கியதுதான்.

ஆம், நாயின் வாயிலிருந்து மன்ஜீத்துடைய காயம் வழியாக பரவிய நோய்க்கிருமிகள்தான் அவருடைய இந்த நிலைமைக்குக் காரணம் என நம்புகிறார்கள் மருத்துவர்கள்.
மன்ஜீத்துக்கு அந்த காயம் காரணமாக செப்சிஸ் என்னும் கிருமித்தொற்று உருவாக, அவரது நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமாக அமையவேண்டிய செல்களே அவரது உடலின் மற்ற செல்களை எதிர்த்துப் போராட, கை கால்களை இழந்து, மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளார் அவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |