நன்றி, பென் வாலஸ்... பிரித்தானிய அமைச்சரின் அந்த கருத்துக்கு எரிச்சலை வெளிப்படுத்திய உக்ரைன்
நன்றியுணர்வு வேண்டும் என குறிப்பிட்ட பிரித்தானிய அமைச்சரின் அந்த கருத்துக்கு லேசான எரிச்சலையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளது உக்ரைன்.
பதிலளித்துள்ள உக்ரைன்
ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அளவற்ற உதவிகளுக்கு உக்ரைன் நன்றியுணர்வு காட்ட வேண்டும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலர் பென் வாலஸ் விமர்சனம் முன்வைத்திருந்த நிலையில், தற்போது உக்ரைன் பதிலளித்துள்ளது.
@PA
உக்ரைன் ஆதரவாளர், நண்பர்களில் ஒருவர் என பென் வாலஸ் தொடர்பில் முன்னர் புகழ்ந்து பேசியிருந்தது உக்ரைன். ஆனால், கடந்த வாரம் லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில் பென் வாலஸ் குறிப்பிட்ட சில கருத்துகள், உக்ரைனை எரிச்சலடைய வைத்துள்ளது.
குறித்த மநாட்டில் பேசிய அமைச்சர் பென் வாலஸ், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மக்கள் கொஞ்சம் நன்றியுணர்வைக் காண விரும்புகிறார்கள் என உக்ரைன் நாட்டை சீண்டியிருந்தார்.
மட்டுமின்றி நேச நாடுகளிடம் உக்ரைனின் அணுகுமுறை எதிர் விளைவுகளை ஏர்படுத்தும் என்றே பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், 11 மணி நேரம் பயணப்பட்டு, உக்ரைன் கோரியிருந்த ஆயுதங்களை அந்த நாட்டிற்கு கொண்டு சேர்க்க, தாம் ஒன்றும் அமேசான் நிறுவனம் அல்ல என்பதை கடந்த ஆண்டே அவர்களிடம் கூறியிருந்ததாகவும் பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.
பூர்த்தி செய்ய முடியாதவை
மேலும், உக்ரைன் முன்வைக்கும் ஆயுதங்களின் கோரிக்கை என்பது பூர்த்தி செய்ய முடியாதவை என்பது மட்டுமல்ல, ஒரு நாட்டின் நிர்வாகத்தால் தனியாக அளிக்க முடியாதவை என பென் வாலஸ் குறிப்பிட்டுள்ளார்.
@reuters
இதனிடையே, பென் வாலஸ் தெரிவித்த நன்றியுணர்வு என்பது தொடர்பில் குறிப்பிட்ட உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அவர் கருத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
பல உக்ரைன் மக்கள், பென் வாலஸ் கருத்துக்கு தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பலர் எரிச்சலையும் காண்பித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |