ரஷ்யா எதிர்கொண்ட மோசமான தாக்குதல் உள்நாட்டில் இருந்தே ஏவப்பட்டதா? உக்ரைன் இராணுவ புலனாய்வு தலைவர் பகீர் தகவல்
பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை தாக்கிய ட்ரோன்கள், ரஷ்யாவின் எல்லைக்குள் இருந்து ஏவப்பட்டது என உக்ரைனின் GUR இராணுவ புலனாய்வு தலைவர் Kyrylo Budanov கூறியுள்ளார்.
ட்ரோன் தாக்குதல்
செவ்வாய்க்கிழமை அன்று ரஷ்யாவின் பிஸ்கோவ் பகுதியில் உள்ள விமான தளத்தை 10 முதல் 20 வரையிலான ட்ரோன்கள் தாக்கியதாக தகவல் வெளியானது.
இது ரஷ்யா எதிர்கொள்ளும் மிக மோசமான தாக்குதல் (உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின்) என்று கூறப்படுகிறது.
Reuters
இந்த நிலையில் உக்ரைன் GUR இராணுவ புலனாய்வு தலைவரான Kyrylo Budanov, ட்ரோன்கள் தாக்குதல் ரஷ்யாவின் எல்லையில் இருந்து நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
ரஷ்ய எல்லையில் இருந்து நடந்த தாக்குதல்
அவர் இதுகுறித்து வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'Pskovயில் உள்ள Kresty விமான தளத்தை தாக்க பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டன. இத்தாக்குதலின் விளைவாக நான்கு ரஷ்ய IL-76 இராணுவ போக்குவரத்து விமானங்கள் தாக்கப்பட்டன. இரண்டு அழிக்கப்பட்டன மற்றும் இரண்டு கடுமையாக சேதமடைந்தன' என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் துருப்புகள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்ல சேதமடைந்த விமானத்தை பயன்படுத்தியதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.
மே மாத இறுதியில் ட்ரோன்களால் குறிவைக்கப்பட்ட Pskov பகுதி, அதன் மேற்கில் நேட்டோ உறுப்பினர்களான எஸ்டோனியா மற்றும் லாட்வியா, தெற்கில் பெலாரஸ் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DMYTRO LARIN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |