மொத்தமாக வழித்தெடுத்த உக்ரைன்! தரைமட்டமானதாக அறிவிப்பு
ரஷ்ய ராணுவத்தின் முக்கிய உபகரணங்களை உக்ரைன் அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் நான்கு மாதங்களாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. முடிவடையாத போரால் இரண்டு நாடுகளும் கடுமையான இழப்பைச் சந்தித்துவருகின்றன.
உக்ரைன் தனது ராணுவம் மற்றும் பொதுமக்களின் உயிரையும், நிலப்பரப்பையும் வேகமாக இழந்துவருகிறது. ரஷ்யா, உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளை சுமந்துகொண்டிருக்கிறது. மேலும், உக்ரைனுக்கு இணையாகத் தங்களின் ராணுவ வீரர்களை இழந்துவருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் ஒரு முக்கிய சம்பவத்தை செய்துள்ளது. அதன்படி 20 ராணுவ வீரர்களை கொன்றதாகவும், 2 வெடிமருந்து கிடங்குகளை தரைமட்டமாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் சுயமாக இயக்கப்படும் ஹோவிட்சர் உட்பட சில உபகரணங்களை மொத்தமாக அழித்ததாகவும் உக்ரைனின் தெற்கு செயல்பாட்டுக் கட்டளை தெரிவித்துள்ளது.