மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகிறது ரஷ்யா: உக்ரைன் பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை
ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல் விரிவாக்கத்திற்கு தயாராகி வருவதாக உக்ரைனின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவை மேற்கோள் காட்டி ஸ்கை நியூஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஓராண்டு நிறைவை எட்டும் போர்
கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது ஓராண்டு நிறைவை தொட்டு இருக்கிறது.
பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தும் இதுவரை போர் நிறுத்தம் குறித்த எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்கப்படாமல் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
EPA
இதற்கிடையில் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் போர் விமானம் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா
இந்நிலையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் உக்ரைனில் குறிப்பிடத்தக்க விரிவான தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ஒலெக்ஸி டானிலோவை(Oleksiy Danilov) மேற்கோள் காட்டி ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது.
DVIDS
அதில் ரஷ்யா அதிகபட்ச விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது, அத்துடன் படைகளில் சாத்தியமான அனைத்தையும் சேகரிக்கிறது, மற்றும் பயிற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது என உக்ரைனிய அதிகாரி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது இந்த கருத்து செவ்வாயன்று பெலாரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அதன் இராணுவ வீரர்கள் ரஷ்ய துருப்புக்களுடன் ஒரு வார கால பயிற்சியை ஆரம்பித்ததாக கூறிய சிறுது நேரத்திற்கு பிறகு வந்துள்ளது.