ரஷ்ய நகரை தாக்கிய ரொக்கெட்: 6 பேர் பரிதாப பலி
ரஷ்யாவின் பெல்கோரோட் மீது உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது 6 பேர் பலியாகினர்.
ரஷ்ய மேற்கு பிராந்தியமான பெல்கோரோட்டின் மீது உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில், 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரொக்கெட் தாக்குதல்
ரஷ்யாவின் மேற்கு பிராந்தியமான பெல்கோரோட்டின் மீது உக்ரைன் ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மேலும், உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 24 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கொலோஸ்கோவோ கிராமத்தில் நடந்த இந்த ரொக்கெட் தாக்குதலில் 14 வயது சிறுவன் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
அத்துடன் ஒரு ரொக்கெட் தாக்குதலால் ஒரு கட்டிடம் மற்றும் ஒரு வாகனம் சேதமடைந்ததாக, பெல்கோரோட் பிராந்தியத்தின் பொறுப்பு ஆளுநர் அலெக்ஸாண்டர் ஷுவேவ் டெலிகிராமில் பதிவிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |