Patriot ஏவுகணைகள் கொண்டு 3 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யாவின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறுகிறது.
மூன்று Russian Su-34 fighter-bomber விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த Bloggers இந்த இழப்பை தனக்கு பதிவுகளில் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் அமெரிக்கா வழங்கிய Patriot missiles பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் Yuri Ihnat உக்ரேனிய தேசிய தொலைக்காட்சியில் இது "நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கை" என்று கூறினார்.
Kherson பகுதியில் இந்த மூன்று ரஷ்ய ஜெட் விமானங்களை வீழ்த்தியதற்காக Odesa பிராந்திய விமான எதிர்ப்புப் பிரிவை உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.
அமெரிக்காவின் இந்த Patriot ஏவுகணைகள் 160 கிமீ (100 மைல்) வரை சென்று உயரமான இலக்குகளுக்கு சுட்டு வீழ்த்தக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகள் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Ukraine shot down three Russian fighter-bombers in Kherson, US Patriot missiles, russia, Ukraine, Volodymyr Zelenskyy