ரஷ்யாவின் மேம்பட்ட Su-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய Su-35 போர் விமானத்தை தங்கள் படை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
குர்ஸ்க் பிராந்தியத்தில்
கடந்த 2024ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில், கீவ் ஒரு எல்லை தாண்டிய தாக்குதலைத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு பிறகு, ஏப்ரல் மாத இறுதியில் ரஷ்யா உக்ரேனிய துருப்புக்களை குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியது.
இந்த நிலையில் உக்ரைன் விமானப்படை ஒரு வெற்றிகரமான நடவடிக்கையை ரஷ்யாவிற்கு எதிராக எடுத்துள்ளது.
அதாவது, ஒரு ரஷ்ய The Sukhoi Su-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது. இது ரஷ்யாவின் மிகவும் மேம்பட்ட நான்காம் தலைமுறை போர் விமானங்களில் ஒன்றாகும்.
இதுகுறித்து உக்ரேனிய விமானப்படை அதன் டெலிகிராம் சேனலில், "இன்று காலை சூன் 7, 2025 அன்று குர்ஸ்க் திசையில் ஒரு வெற்றிகரமான விமானப்படை நடவடிக்கையின் விளைவாக, ஒரு ரஷ்ய Su-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது" என தெரிவித்துள்ளது.
தீப்பிடித்து எரிந்த சிதைவுகள்
அத்துடன் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானம், தீப்பிடித்து எரிந்த அதன் சிதைவுகள் என்று கூறுவதைக் காட்டும் வான்வழிக் காட்சிகளையும் வெளியிட்டது.
எனினும், விமானம் எப்படி அல்லது சரியாக எங்கு சுட்டு வீழ்த்தப்பட்டது என்பதைக் குறிப்பிடவில்லை. ஆனால், ரஷ்யாவின் உள்ளூர் செய்தி நிறுவனமான Pepel, குர்ஸ்க் பிராந்தியத்தின் கோர்னெவ்ஸ்கி மாவட்டத்தில் ஜெட் விமானம் விபத்திற்குள்ளானதாக தெரிவித்துள்ளது.
அதேபோல் ரஷ்யாவிற்கு ஆதரவான மற்றொரு டெலிகிராம் சேனலான Fighterbomber, விமானத்தில் இருந்த விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்ததாக தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |