கேரளாவில் சிக்கிய பிரித்தானிய F-35B போர் விமானம் ஹேங்கருக்கு நகர்த்த அனுமதி
கேரளாவில் சிக்கிய பிரித்தானிய F-35B போர் விமானம் ஹேங்கருக்கு நகர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களாக கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய நிலையில் நிறுத்தப்பட்டிருந்த பிரித்தானியாவின் F-35B போர்விமானம், விரைவில் விமான நிர்வாகக் கழக ஹேங்கருக்கு நகர அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் உயர் கமிஷன் தெரிவித்துள்ளது.
இதற்கான சிறப்பு உபகரணங்களுடன் பிரித்தானிய இயந்திரப்பணி குழு இந்தியாவிற்கு வரவுள்ள நிலையில், அதன் பின்னர் விமானம் ஹேங்கருக்கு நகர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, F-35B-இன் உயர் ரகசிய தொழில்நுட்பங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் காரணமாக ஹேங்கருக்கு நகர்த்துவதை பிரித்தானிய கடற்படை நிராகரித்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால் தற்போது, பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து நகர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 14 அன்று, இந்தியக் கடற்படையுடன் கூட்டு கடல் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு HMS Prince of Wales கேரியருக்கு திரும்பிக்கொண்டிருந்த போது எரிபொருள் குறைவால் அவசரமாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது.
அதன் பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் புறப்பட முடியாமல் இருந்தது.
F-35B என்பது அமெரிக்காவின் Lockheed Martin நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானம் ஆகும்.
இதன் மதிப்பு சுமார் 100 மில்லியன் பவுண்டு மற்றும் உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. இதில் நிகழும் ஒளிர் பிரதிபலிப்பு பரப்பளவு வெறும் 0.005 சதுர மீற்றர் மட்டுமே என்பதால் எதிரி ரேடார்களில் காண்பது கடினம்.
இந்த விமானம் விரைவில் பழுது செய்யப்பட்டு செயலில் மீண்டும் இணைக்கப்படும் என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
F-35B fighter jet Kerala, UK stealth jet emergency landing, British F-35B India airport, F-35B hangar move Kerala, Royal Navy aircraft Thiruvananthapuram, F-35B technical issue India, Lockheed Martin F-35B, Indo-Pacific military exercises, UK-India defence cooperation, F-35B stealth technology