ஐநா உலக உணவு திட்ட அமைப்பின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து: 3 பேர் வரை காயம்!
காங்கோவில் விபத்துக்குள்ளானது ஐக்கிய நாடுகள் சபையின் ஹெலிகாப்டர்.
மூன்று பணியாளர்கள் வரை காயமடைந்து இருப்பதாக தகவல்.
காங்கோவின் கிழக்கு ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு மாகாணத்திற்கு மேல் பறந்து கொண்டு இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என ஐநாவின் உலக உணவுத் திட்டம் அமைப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை ஐநா உலக உணவுத் திட்டம் (WFP)ஆல் நிர்வகிக்கப்படும் ஐக்கிய நாடுகளின் சபையின் மனிதாபிமான விமான சேவை ஹெலிகாப்டர் வடக்கு கிவு மாகாணத்தின் கோமா நகருக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
Reuters
இந்த விபத்தில் விமான பணியாளர்கள் மூன்று பேர் வரை காயமடைந்து இருப்பதாகவும், விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை என்றும் அங்குள்ள உதவி நிறுவனம் ராய்ட்டர்ஸ்-க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டரின் பயணம் குறித்த விவரம் வழங்கப்படாத நிலையில், விபத்து குறித்த காரணங்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை என்று ஐநாவின் உலக உணவுத் திட்டம் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதைப்போன்றே கடந்த மாதம் வடக்கு கிவுவில் உள்ள Tshanzu பகுதியில் ஐக்கிய நாடுகளின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 8 அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டனர்.
AFP
இந்த விபத்து காங்கோ ராணுவத்திற்கும் எம்23 என்ற கிளர்ச்சியாளர்கள் குழுவிற்கும் இடையே நடைபெற்ற மோதலில், உளவுப் பணியில் ஈடுபட்டு இருந்த ஐநாவின் ஹெலிகாப்டர் கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த புகாரை M23 கிளர்ச்சியாளர்கள் குழு முற்றிலுமாக மறுத்தது.
கூடுதல் செய்திகளுக்கு: ஆசிய கோப்பை தொடரில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகல்: மாற்று வீரரை அறிவித்தது பிசிசிஐ
மேலும் விபத்திற்கான காரணத்தை ஐ.நா அமைதி காக்கும் பணி MONUSCO தெரிவிக்கவில்லை மற்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.