குழந்தை திருமணங்களில் பாதிக்கு மேல் இந்த 5 நாடுகளில் தான்... யுனிசெப் வெளியிட்ட அறிக்கை
உலகில் இந்தியா உட்பட 5 நாடுகளில் தான் குழந்தை திருமணங்களில் பாதிக்கு மேல் நடைபெறுகிறது என யுனிசெப் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது, உலகில் இதுவரை 65 கோடி சிறுமிகளும் பெண்களும் குழந்தை பருவத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அவர்களில் பாதி பேர் வங்காளதேசம், பிரேசில், எத்தியோப்பியா, இந்தியா மற்றும் நைஜீரியாவில் உள்ளனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், உலகளவில் குழந்தைகளாக திருமணம் செய்து கொண்ட இளம் பெண்களின் விகிதம் 15 சதவீதம் குறைந்துள்ளது,
இது கிட்டத்தட்ட 4 ல் 1 ல் இருந்து 5 ல் 1 ஆக இருந்தது, இது 2.5 கோடி திருமணங்களுக்கு சமமானதாகும்.
துணை சஹாரா ஆபிரிக்காவில் குழந்தை திருமணத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது,
அங்கு 35 சதவீத இளம் பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து தெற்காசியாவில் கிட்டத்தட்ட 30 சதவீத பெண்கள் 18 வயதிற்கு முன் திருமணம் செய்து கொள்கின்றனர்.
லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் குழந்தை திருமணங்களில் சுமார் 24 சதவீதமும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் 17 சதவீத குழந்தைத் திருமணங்களும் நடைபெறுகின்றன.
கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் சுமார் 12 சதவீத குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பள்ளிகளை மூடுவது, பொருளாதார மன அழுத்தம், பெற்றோரின் இறப்பு மற்றும் கர்ப்பம் ஆகியவை குழந்தை திருமண அபாயத்தை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.