கமேனி மரணத்தால் துயரத்தில் மூழ்கிய இந்திய கிராமம்
மத்திய கிழக்கில் நடந்துவரும் மோதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்த செய்தி இந்தியாவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக உத்தர பிரதேசம் பரபங்கி மாவட்டத்தில் உள்ள கிண்டூர் கிராமம், கமேனி குடும்பத்தின் வேர்கள் கொண்ட இடமாகும்.
1834-ஆம் ஆண்டு, சையத் அஹ்மத் முசாவி என்ற ஷியா மத குரு கிண்டூரில் இருந்து ஈரானுக்கு புனித யாத்திரைக்குச் சென்றார். அங்கு குடியேறி குடும்பத்தை அமைத்தார்.
அவரது வம்சத்திலிருந்து 1979-ல் இஸ்லாமிய புரட்சியை நடத்தி ஈரானை மாற்றியமைத்தவர் ருஹோல்லா கமேனி. பின்னர் அவரின் வாரிசான அலி கமேனி ஈரானின் உச்ச தலைவராக இருந்தார்.

கமேனியின் மரண செய்தி வந்தவுடன் கெண்டூரில் உள்ள ஷியா, சன்னி என அனைத்து இஸலாமிய மக்களும் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
கடைகள் மூடப்பட்டன, துயர் கூட்டங்கள் நடைபெற்றன, கருப்பு உடையில் மக்கள் ஊரவலமாகச் சென்றனர். இஸ்ரயேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கமேனி அடக்குமுறைக்கு அடிபணியாமல் வீரத்துடன் வாழ்ந்தார். அவரது மரணம் நினைவுகூரத்தக்கது என போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிண்டூரில் இன்னும் கமேனி குடும்பத்தின் படங்கள் வீடுகளில் தொங்குகின்றன. இராது நூற்றாண்டுகளுக்கு முன் உறவுகள் துண்டிக்கப்பட்டாலும் இந்த கிராம மக்கள் தங்கள் வேர்களை மறக்கவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |