ஐரோப்பா நோக்கி படையெடுக்கும் இந்த நாட்டவர்களுக்கு அவசர பயண எச்சரிக்கை
அவுஸ்திரேலிய சுற்றுலாப்பயணிகள் அடிக்கடி பயணப்படும் குறைந்தது நான்கு ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாக ஹெபடைடிஸ் ஏ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை 2097 பேர்கள்
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான தரவுகளில், ஆஸ்திரியா, செக்கியா, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவில் கல்லீரல் தொற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 2097 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியாவில் கடந்த 2022ல் இருந்தே கல்லீரல் தொற்று உறுதி செய்யப்பட்டு, இந்த ஆண்டு மட்டும் இதுவரை 880 பேர்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரியாவில் மூன்று இறப்புகள் உட்பட 87 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது, செக்கியாவில் ஆறு இறப்புகள் உட்பட 600 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இளம் சிறார்களே மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹங்கேரியில் 530 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ள நிலையில், ஜேர்மனியில் மூவருக்கு கல்லீரல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே ஐரோப்பா நோக்கி சுற்றுலாவுக்கு என படையெடுக்கும் அவுஸ்திரேலியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹெபடைடிஸ் ஏ ஆபத்தான தொற்றுநோய் என்பதை அவுஸ்திரேலிய பயணிகள் அறிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும், மாசுபட்ட முறையாக சமைக்கப்படாத உணவை உண்ணுதல்... மாசுபட்ட தண்ணீரைக் குடித்தல்...
தடுப்பூசி மற்றும் நல்ல சுகாதாரம்
தொற்று உள்ள நபரின் அழுக்கு நாப்கின்கள், லினன் அல்லது துண்டுகளைக் கையாளுதல்; தொற்று உள்ள நபருடன் தனிப்பட்ட பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுதல்... தொற்று உள்ள நபருடன் நெருங்கிய அல்லது நெருக்கமான தொடர்பில் இருத்தல் உள்ளிட்டவையால் பாதிப்பு ஏற்படும் என்றும் விளக்கமளித்துள்ளனர்.
அத்துடன், ஹெபடைடிஸ் ஏ கடுமையான பாதிப்பையும் மரணத்தையும் ஏற்படுத்தும், குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு மற்றும் அடிப்படை சுகாதாரம் குறைவாக உள்ளவர்களுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.
ஹெபடைடிஸ் ஏ தொற்றுக்கு எதிராக பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மற்றும் நல்ல சுகாதாரம் சிறந்த வழிகள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த வைரஸ் பொதுவாக சுத்தமான தண்ணீர் பற்றாக்குறையாலும், பொருட்களை சரியாக சுத்தம் செய்யாததாலும் பரவுகிறது.
மேலும், இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைவரும் குணமடைவார்கள், ஆனால் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்கள் மிகவும் நோய்வாய்ப்படலாம் அல்லது கல்லீரல் செயலிழப்பால் இறக்கலாம்.

பாகிஸ்தான் மீது உக்கிரத் தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்த இந்தியக் கடற்படை... வெளிவரும் புதிய தகவல்
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள். சாப்பிடுவதற்கு முன் கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்துங்கள். அடிக்கடி கைகளைக் கழுவுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி, ஐஸ் கட்டிகள் கொண்ட பானங்கள், சமைக்கப்படாத அல்லது சரியாக சமைக்கப்படாத உணவு, புதிய சாலடுகள் மற்றும் பச்சை காய்கறிகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |