ஈரானில் வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானம்: ஒரு விமானியை உயிருடன் மீட்ட அமெரிக்கா
ஈரானில் அமெரிக்காவின் F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறியதாக கூறப்படுகிறது.
அமெரிக்க சிறப்பு படையினர், ஒருவரை ஈரான் நிலப்பரப்பில் உயிருடன் மீட்டுள்ளனர். மற்றொருவரை தேடும் நடவடிக்கை இன்னும் நடைபெற்று வருகிறது.
ஈரான் அரசு, பொதுமக்களையும் தேடுதலில் பங்கேற்க அழைத்து, “அமெரிக்க வீரரை கண்டுபிடித்தால் பரிசு வழங்கப்படும்” என அறிவித்துள்ளது.

இதேசமயம், இஸ்ரேல் அமெரிக்காவுக்கு உளவுத்தகவல் உதவி வழங்கி வருகிறது.
இஸ்ரேல் அதிகாரிகள், தேடுதல் நடவடிக்கையை பாதிக்காமல் இருக்க திட்டமிட்ட தாக்குதல்களை ரத்து செய்ததாக தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 28-ஆம் திகதி போரின் தொடங்கியதிலிருந்து, முதல்முறையாக அமெரிக்க போர் விமானி தேடப்படுகிறார். இதுவரை 13 அமெரிக்கர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை, “ஈரானின் வான்வழி முழுமையாக எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது” என முன்பு தெரிவித்திருந்தாலும், இந்த சம்பவம் அந்தக் கூற்றை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
அமெரிக்கா-ஈரான் போரின் தீவிரம் அதிகரிக்கும் நிலையில், F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |