அமெரிக்காவின் புதிய தாக்குதல் - ஈரான் கடுமையான பதில் தருவதாக எச்சரிக்கை
US launches strikes Iran vows retaliation: அமெரிக்காவின் புதிய தாக்குதலுக்கு, ஈரான் கடுமையான பதிலடி தருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா-ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
சென்ட்காம் (CENTCOM) அறிவிப்பின்படி, அமெரிக்க இராணுவம் ஈரானின் IRGC இலக்குகளை தாக்கியுள்ளது.

இந்த தாக்குதல், ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களுக்கு எதிராக நடந்த முயற்சிகள் மற்றும் அமெரிக்க வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலாக நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஈரான் பதில்
இதற்கு ஈரான் உடனடியாக பதிலளித்துள்ளது. “அமெரிக்கா புதிய தாக்குதலுக்காக கடுமையான தண்டனை அனுபவிக்கும்” என IRGC பேச்சாளர் ஹொசெயின் மொஹெப்பி எச்சரித்துள்ளார்.
ஈரானின் தெற்கு பகுதிகளில், குறிப்பாக கோனராக், பந்தர் அப்பாஸ் மற்றும் கிஷம் தீவு ஆகிய இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்ததாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “இந்த தாக்குதல் பெரியது என்றும், சக்திவாய்ந்தது என்றும்” கூறி, ஈரான் பதிலடி கொடுத்தால் “மிகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும்” என எச்சரித்துள்ளார்.
அவர், “இது மிகப்பெரிய தாக்குதல் அல்ல, ஆனால் அப்படியொரு தாக்குதல் காத்திருக்கிறது. அது நடந்துவிட்டால், ஈரானின் கொஞ்ச நஞ்ச பகுதி தன மிஞ்சும்” எனக் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு, Brent crude எண்ணெய் விலை 4 சதவீதம் உயர்ந்து பீப்பாய்க்கு 92 டொலர் என்ற அளவுக்கு சென்றுள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை கேலன் 4 டொலராக (3.8 லிட்டர்) உயர்ந்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சகம், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாக்குதல், கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா லாரக் தீவை தாக்கியதற்குப் பிறகு, ஈரான் ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தை ஏவுகணைகளால் தாக்கிய சம்பவத்தின் தொடர்ச்சியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |