ஏப்ரல் 6 - ட்ரம்ப் உத்தரவுக்காக காத்திருக்கும் அமெரிக்க கடற்படை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழ்நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா தனது மிகப்பெரிய கடற்படை படைகளை ஒன்றிணைத்துள்ளது.
மூன்று விமானம் தாங்கி கப்பல்கள், ஒரு பெரிய Amphibious Assault கப்பல், 4,000-க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் ஆகியோர், ஏப்ரல் 6-ஆம் திகதி ட்ரம்ப் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது, USS Gerald Ford மத்திய தரைக்கடலில், USS George Bush ஜிப்ரால்டர் அருகே, USS Abraham Lincoln அரேபியக் கடலில், USS Tripoli மற்றும் USS New Orleans தெற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ளன.

கூடுதலாக, USS Alan Shepard, Ocean Titan, John L Canley ஆகியவை மலாக்கா நீரிணையில் கண்காணிப்பு பணியில் உள்ளன.
அமெரிக்கா, 11 Arleigh Burke Class destroyer கப்பல்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவற்றை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிறுத்தியுள்ளது. மேலும், Los Angeles Class fast attack நீர்மூழ்கி கப்பல்கள் ஈரான் கடற்படையை குறிவைத்து செயல்படுகின்றன.

இந்நிலையில், அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளித்தாலும், கடற்படை படைகள் முழுமையாக தயார்நிலையில் இருப்பது, போர் இன்னும் முடிவடையவில்லை என்பதை காட்டுகிறது.
“இது வெறும் ஒரு பாதி மட்டுமே, அடுத்த கட்டம் மிகப்பெரிய தாக்குதலாக இருக்கலாம்” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |