பிரேசிலை தண்டிக்க முடிவு., 25 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டம்
25 சதவீதம் வரி விதித்து பிரேசில் நாட்டை தண்டிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம், பிரேசிலின் வர்த்தக நடைமுறைகள் அநியாயமானவை எனக் கூறி, பல்வேறு இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் புதிய சுங்கவரி விதிக்க முன்மொழிந்துள்ளது.
Section 301 வர்த்தக சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (USTR) தெரிவித்ததாவது, பிரேசிலின் டிஜிட்டல் வர்த்தகம், அறிவுசார் உரிமைகள், எத்தனால் சந்தை அணுகல், சுங்க சலுகைகள் போன்ற துறைகளில் அநியாயமான நடைமுறைகள் உள்ளன. இதனால் அமெரிக்க வர்த்தகத்திற்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சுங்கவரியானது, மாட்டிறைச்சி, காபி, rare earths கனிமங்கள், மருத்துவ தயாரிப்புகள், எண்ணெய், விமான பாகங்கள் போன்றவற்றுக்கு விதிக்கப்படாது.
ஆனால், பல்வேறு உற்பத்திப் பொருட்கள், உலோகங்கள் மற்றும் finished products மீது 25 சதவீத சுங்கவரி விதிக்கப்பட உள்ளது.
அமெரிக்கா-பிரேசில் உறவுகள் சமீபத்தில் பதட்டமான நிலையில் உள்ளன. பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா கடந்த மாதம் வெள்ளை மாளிகைக்கு சென்றிருந்தாலும், இருதரப்பு உறவுகள் மோசமாகிவிட்டன.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, பிரேசிலின் இரண்டு பெரிய குற்றவியல் கும்பல்களை பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்தது, பிரேசிலின் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
மேலும், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயிர் போல்சோனாரோ மீது நடந்த வழக்குகள் காரணமாக, கடந்த ஆண்டு அமெரிக்கா 50 சதவீத சுங்கவரி விதித்தது. ஆனால், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இப்போது, அதற்குப் பதிலாக 25 சதவீதம் புதிய சுங்கவரி முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு குறித்து பொதுமக்களின் கருத்துகளை ஜூலை 1 வரை பெற USTR அறிவித்துள்ளது. ஜூலை 6 அன்று பொதுக் கேள்வி–பதில் கூட்டம் நடைபெறும். ஜூலை 15-க்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்த நடவடிக்கை, அமெரிக்கா-பிரேசில் வர்த்தக உறவுகளை மேலும் சிக்கலாக்கும் என கூறப்படுகிறது.