இந்தியாவின் இந்த மாநிலங்களில் ஆபத்து; பெண்கள் தனியாக பயணிக்க வேண்டாம் - அமெரிக்கா திடீர் எச்சரிக்கை
இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது அமெரிக்கா வெளியுறவுத்துறை.
அதிகரித்துள்ள வன்முறை
இந்தியாவில் குற்றம் மற்றும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருவதால், இங்குள்ள அமெரிக்கர்களுக்கு பயண ஆலோசனைகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் சுற்றுலா தலங்கள் மற்றும் பிற இடங்களில், வன்கொடுமை உட்பட வன்முறை குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
மேலும், சந்தைகள், போக்குவரத்து மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு கட்டிடங்கள் போன்ற இடங்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் சிறிய அல்லது எச்சரிக்கை இல்லாமல் தாக்கக்கூடும்.
மாநிலங்களுக்கு செல்ல அனுமதி
இந்தியாவின் சில கிராமப்புறங்களில் உள்ள தனது குடிமக்களுக்கு அவசர உதவி வழங்க அமெரிக்க அரசாங்கத்திற்கு குறைந்த திறனே உள்ளது. பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் இந்த இடங்களுக்குச் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைபேசி அல்லது ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது, மேலும், 2,00,000 டொலர் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று பயணிகள் சில சாதனங்களை எடுத்துச் செல்வது தொடர்பாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் தனியாக பயணம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது.
மேலும், பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மேகாலயா மற்றும் ஒடிசாஆகிய 6 மாநிலங்களில் தலைநகரம் தவிர பிற பகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவின் கிழக்குப் பகுதிக்கும் மத்தியப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதிக்கும் மற்றும் மணிப்பூர் செல்லவும் செல்ல அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |