ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா இழந்த விமானங்கள் எத்தனை? விக்ரம் மிஸ்ரி விளக்கம்

Rahul Gandhi Pakistan India Operation Sindoor
By Karthikraja May 19, 2025 02:41 PM GMT
Report

 ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாராளுமன்ற நிலைக்குழுவிடம் விளக்கமளித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கியழித்தது. 

ஆபரேஷன் சிந்தூர்

இதன் காரணமாக இரு நாடுகளும் இடையே சில நாட்கள் போர் பதற்றம் நீடித்தது. இந்தியாவின் எல்லைபகுதிக்குள் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

விமானங்களை இழந்த இந்தியா?

இதனை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்த இந்திய ராணுவம், பதிலுக்கு பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து கடந்த மே 10 ஆம் திகதி, இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தன. 

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா இழந்த விமானங்கள் எத்தனை? விக்ரம் மிஸ்ரி விளக்கம் | Vikram Misri About How Many Flights India Lost Pak

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், 3 ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு SU-30 போர் விமானம் உட்பட இந்திய விமானப்படையின் 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. 

ஆபரேஷன் சிந்தூர்; 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்?

ஆபரேஷன் சிந்தூர்; 5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்?

இதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்தது. அடுத்த சில நாட்களில் போர் என்றால் சில இழப்புகள் இருக்க தான் செய்யும் என ராணுவ தளபதி தெரிவித்தார். ஆனால் இந்தியா போர் விமானங்களை இழந்ததா என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா?

 செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடக்கத்தில் பயங்கரவாதிகளின் முகாம்களாக உள்ள உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பப்பட்டது" என தெரிவித்தார். 

அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த கருத்தை, எதிர்க்கட்சியான காங்கிரஸ் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

இது குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்னரே தகவல் தெரிவித்ததால், இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது என கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம்

ராகுல் காந்திக்கு விளக்கமளித்த வெளியுறவு அமைச்சகம், ஆரம்பத்திலேயே பாகிஸ்தானை எச்சரித்தோம். இது ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு ஆரம்ப கட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடங்குவதற்கு முன்பு என தவறாக சித்தரிக்கப்படுகிறது என தெரிவித்தது.

விக்ரம் மிஸ்ரி விளக்கம்

இந்நிலையில்ம் இன்று வெளியுறவு துறை செயலாளர் விவேக் மிஸ்ரி பாராளுமன்ற நிலைக்குழு முன்னர் ஆஜராகி விளக்கமளித்தார். 

vikram misri in parliamentary panel

இதில் போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீடு குறித்து கேள்வி எழுப்பிய போது, இரு நாடுகளின் தரப்பில் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பேசி முடிவெடுக்கப்பட்டது என தெரிவித்தார். 

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

மேலும், ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் எத்தனை போர் விமானங்கள் சேதமடைந்தது என கேட்கப்பட்டதற்கு, 'பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை வழங்க இயலாது' என தெரிவித்தார். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US