கொல்கத்தாவிற்கு ஆரஞ்சு அலெர்ட் - மழையால் KKR vs RCB போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?
மழை காரணமாக இன்று கொல்கத்தாவில் நடைபெற உள்ள முதல் ஐபிஎல் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளது.
ஐபிஎல் தொடக்க விழா
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 18 வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
முதல் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
போட்டிக்கு முன்னதாக, கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது.
கொல்கத்தாவில் மழை
அதேவேளையில் இன்றைய போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
காரணம் கொல்கத்தாவில் 20 முதல் 22ஆம் திகதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
A little rain won’t stop us! 🌧
— Star Sports (@StarSportsIndia) March 21, 2025
The ground’s got its cozy cover, and the drainage system will be ready to save the day 𝘒𝘺𝘶𝘯𝘬𝘪 𝘠𝘦𝘩 𝘐𝘗𝘓 𝘩𝘢𝘪, 𝘺𝘢𝘩𝘢𝘯 𝘴𝘢𝘣 𝘱𝘰𝘴𝘴𝘪𝘣𝘭𝘦 𝘩𝘢𝘪!#IPLonJioStar 👉 SEASON OPENER #KKRvRCB | SAT, 22nd March, 5:30 PM | LIVE on… pic.twitter.com/UwdonS9FeN
நேற்று பெய்த மழை காரணமாக, கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளின் பயிற்சி ஆட்டம் தடைபட்டது.
மழை பெய்தால் என்ன நடக்கும்?
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள தொடக்க விழாவும், 7:30 மணிக்கு தொடங்கும் போட்டியும் நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் லீக் போட்டிகளில், கூடுதலாக ஒரு மணி நேரம் எடுத்துகொள்ள அனுமதி உண்டு.
ஒருவேளை அந்த நேரத்தில் மழை தொடர்ந்தால், ஐபிஎல் விதிகளின் படி நடுவர்கள் 10:56 வரை காத்திருக்கலாம். அதன் பின்னர் 5 ஓவர் கொண்ட போட்டியாக நடத்த வாய்ப்புள்ளது. அந்த போட்டி மறுநாள்12:05 மணிக்கு முடிவடைய வேண்டும்.
ஒருவேளை 10:56 மணிக்கு, பின்னரும் மழை தொடர்ந்தால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |