வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு காலக்கெடு... ஐரோப்பிய பாதுகாப்பு நுகர்வோர் ஆணையம் கடிதம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் நுகர்வோர் நல சட்டங்களை குறிப்பிட்ட கால வரையறைக்குள் வாட்ஸ் ஆப் நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஆணையம் கடந்த புதன் கிழமை கெடு விதித்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் மிக முக்கிய சமூக ஊடக தளமான வாட்ஸ் ஆப்பில் கடந்த ஜனவரி மாதம் புதிய தனியுரிமை சட்டங்கள் புதுப்பித்து அப்டேட் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இந்த புதிய தனியுரிமை சட்டங்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ள கொள்கைகள் குறித்த போதுமான விளக்கங்கள் இல்லை என்றும், இவை ஐரோப்பிய ஒன்றியத்தின் நுகர்வோர் சட்டங்களை மீறுவதாக உள்ளது எனவும் ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு மற்றும் ஐரோப்பிய நுகர்வோர் அமைப்புகளின் நெட்வொர்க் குற்றஞ்சாட்டி இருந்தது.
மேலும் அப்டேட் செய்யப்பட்ட தனியுரிமை தொடர்பான விளக்கங்களை வாட்ஸ் நிறுவனம் அளிக்க வேண்டும் என தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி வைத்தது.
இதற்கு கடந்த மார்ச் மாதம் வாட்ஸ் ஆப் நிறுவனம் பதிலளித்து இருந்த போதிலும், அந்த விளக்கங்கள் திருப்திகரமானதாக இல்லை என தெரிவித்து, விரிவான மற்றும் தெளிவான விளக்கங்களை வாட்ஸ் ஆப் நிறுவனம் வழங்க வேண்டும் என கடந்த புதன்கிழமை ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு மீண்டும் வாட்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
இந்த கடிதம் தொடர்பாக ஐரோப்பிய நுகர்வோர் பாதுகாப்பு நெட்வொர்க் தலைவர் டீடியர் ரேயண்டர்ஸ் கூறுகையில், “தங்களுடைய தனி விவரங்களை வணிக ரீதியாக வாட்ஸ் அப் எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்பதை பயனாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்.
குறிப்பாக, சர்வீஸ் பார்னர்களுக்கு வழங்கப்படும் டேட்டா குறித்த விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்’’ என்ற குறிப்புகள் கடிதத்தில் இடம் பெற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Ink Drop/Shutterstock
கூடுதல் செய்திகளுக்கு: திணறடிக்கும் ஆற்று வெள்ளத்திலும்...சீன பள்ளி மாணவர்களின் துணிச்சல் செயல்!
கடிதம் தொடர்பான பதில், உரிய காலத்திற்குள் வழங்கப்படும் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரி மாதம் அப்டேட் செய்யப்பட்ட தனியுரிமை கொள்கையில் பயனர்கள் பாதிக்கப்படும் அளவிற்கு எத்தகைய மாற்றங்களையும் செய்யவில்லை என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.