அமெரிக்க தேர்தலில் களமிறங்கும் சென்னை பெண்ணின் மகள் - யார் இந்த கமலா ஹாரிஸ்?
உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடாக கருதப்படும் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப்பும் களமிறங்கியிருந்தார்கள்.
ஆனால் திடீரென்று அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகுவதாகவும், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து கமலா ஹாரிஸ் குறித்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருந்தன.
யார் இந்த கமலா ஹாரிஸ்?
கமலா ஹாரிஸ் 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் திகதி ஓக்லாண்ட், கலிபோர்னியாவில் பிறந்தார்.
ஹாரிஸின் தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். அவர் Stanford பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். மற்றும் அவரது தாயார் ஒரு இந்திய பெண். இவர் புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார்.
கமலா ஹாரிஸ் தனது இந்திய குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தார். மேலும் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு தனது தாய் மற்றும் சகோதரியுடன் அடிக்கடி பயணம் செய்து வருவார்.
கமலா ஹாரிஸுக்கு 7 வயது இருக்கும்போது அவரது பெற்றோர் விவாகரத்து பெற்று விட்டனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் பயின்று, பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பட்டம் பெற்றார்.
வழக்கறிஞராக இருந்த இவர் 2004 முதல் 2011 ஆம் ஆண்டு வரை சான்பிரான்சிஸ்கோ மாவட்ட நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார்.
பின் 2011 முதல் 2017 வரை கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக பணியாற்றினார்.
இந்தப் பதவியை வகித்த முதல் பெண், முதல் கறுப்பின அமெரிக்கர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றார்.
அரசியல் பயணம்
2012 ஆம் ஆண்டில் ஹாரிஸ் ஜனநாயக தேசிய மாநாட்டில் ஒரு மறக்கமுடியாத உரையை நிகழ்த்தினார், அதுவே அவரது தேசிய சுயவிவரத்தை உயர்த்த உதவியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வழக்கறிஞர் டக்ளஸ் எம்ஹாஃப் என்பவரை மணந்தார்.
2016 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
அதுவே செனட் சபைக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் முதல் தேர்வானதாகும். குறுகிய காலத்திலேயே முக்கிய தலைவராக உருவெடுத்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலிலும் வேட்பாளராகவும் தன்னை முன்னிறுத்திக் நின்றார்.
முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது அவர் வைத்த குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் பெரும் அலையை ஏற்படுத்தியது எனலாம்.
அதன்போது அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொருளாதார சிக்கல்களால் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பின்வாங்கினார்.
இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடவுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |