தஜிகிஸ்தான் விமான தளத்தை விட்டு வெளியேறிய இந்தியா - என்ன காரணம்?

India Tajikistan
By Karthikraja Nov 01, 2025 12:58 PM GMT
Report

 தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமான தளத்தை விட்டு வெளியேறியதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அய்னி விமானப்படை தளம்

மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானின் தலைநகர் துஷான்பே அருகே அமைந்துள்ள அய்னி விமானப்படை தளத்தை(ayni airbase), கடந்த 2002 ஆம் ஆண்டில் இருதரப்பு ஒப்பந்தம் மூலம் இந்தியா சீரமைத்தது. 

ayni airbase tajikistan

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் நிதி உதவியுடன், இந்திய ராணுவமும், எல்லை சாலைகள் அமைப்பு (BRO) இந்த விமான தளத்தை சீரமைத்தது.

சுமார் 100 மில்லியன் டொலர் செலவில், விமான ஓடுபாதையை 3,200 மீட்டராக விரிவுபடுத்தியது, விமான ஹேங்கர்களை உருவாக்கியது, எரிபொருள் நிரப்பும் அமைப்புகளை நிறுவியது. 

தேர்தல் முடிவிற்கு எதிராக வெடித்த வன்முறை - 700 பேர் உயிரிழப்பு

தேர்தல் முடிவிற்கு எதிராக வெடித்த வன்முறை - 700 பேர் உயிரிழப்பு

இந்தியா இங்கு நிரந்தரமாக படைகளை நிலைநிறுத்தவில்லை என்றாலும், 3 இராணுவ ஹெலிகாப்டர்களை இயக்கியது. மேலும், 2014 ஆம் ஆண்டு முதல் Sukhoi Su-30 போன்ற போர் விமானங்களைக்கூட சில காலகட்டத்திற்கு நிலைநிறுத்தியிருந்தது. 

ayni airbase tajikistan

இது ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதோடு, பாகிஸ்தானுக்கும் அருகில் இருந்ததால், இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த தளமாக கருதப்பட்டது.

வெளியேற காரணம் என்ன?

ஆனால், இந்த ஒப்பந்தம் 2022 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த நிலையில், தஜிகிஸ்தான் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததால் இந்தியா அந்த தளத்தை விட்டு வெளியேறியது.

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா தனது பணியாளர்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை திரும்பப் பெறுவதை முடிவுக்கு கொண்டுவந்தது. அதன் பின்னர் இந்த தளத்தை ரஷ்யா படைகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

3 ஆண்டுகள் கழித்து தற்போது அய்னி விமான தளத்தை விட்டு வெளியேறியதை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. 

ayni airbase tajikistan

மத்திய ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனா மற்றும் ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக, தஜிகிஸ்தான் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

உலகின் டாப் 5 ஆபத்தான விமான நிலையங்கள்: சிறிய தவறு கூட பேரழிவாக முடியலாம்

உலகின் டாப் 5 ஆபத்தான விமான நிலையங்கள்: சிறிய தவறு கூட பேரழிவாக முடியலாம்

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய போது அங்கிருந்து இந்தியர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை வெளியேற்ற, இந்த விமான தளம் முக்கிய தளவாட மையமாக செயல்பட்டது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US