வைரம் பதிக்கப்பட்ட ரோலக்ஸ் கை கடிகாரம்! லண்டன் கத்திக்குத்தில் பெண் மீது கொலை வழக்குப்பதிவு
பிரித்தானியாவின் கேம்டனில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பெண் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் கத்திக்குத்து
லண்டன், கேம்டன் பகுதியில் உள்ள தனது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட ஜெனிஃபர் அபோட் கொலை வழக்கில், 69 வயதான ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாரா ஸ்டீன்பெர்க் என்றும் அறியப்படும் ஜெனிஃபர் அபோட், கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு லண்டனில் உள்ள அவரது பிளாட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மெட்ரோபொலிட்டன் காவல்துறையால் நான்சி பெக்ஸ்டன் (69) என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் இன்று ஹைபரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கவலையடைந்த உறவினர்
ஜூன் 10ம் திகதி அவர் தனது கோர்கி நாயுடன் அப்பகுதியில் நடந்து சென்ற போது தான் கடைசியாக அவர் பார்க்கப்பட்டுள்ளார்.
அபோட்டின் குடும்பத்தினர் பல நாட்களாக அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாததால் கவலை அடைந்ததை அடுத்து, அவரது உறவினர் மற்றும் அண்டை வீட்டார் இணைந்து அவரது பிளாட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் சடலமாக கிடந்ததைக் கண்டுள்ளனர்.
மரணத்திற்கான காரணம் கூர்மையான ஆயுதத்தால் ஏற்பட்ட காயம் என பிரேதப் பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, காணாமல் போன வைரங்கள் பதிக்கப்பட்ட ரோலக்ஸ் கை கடிகாரத்திற்கும் இந்த மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |