3 வயது சிறுமியை ரயில் பாதையில் தள்ளிவிட்ட பெண்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள்
அமெரிக்காவில் ஓரிகான் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுமியை ரயில் பாதையில் தள்ளிவிட்ட 32 வயது பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள்
அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் பிளாட்பார்மில் தனது அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த மூன்று வயது சிறுமியை பெண் ஒருவர் திடீரென ரயில் பாதையில் தள்ளிவிட்ட அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் அனைவரையும் திகிலடைய வைத்துள்ளது.
அந்த வீடியோவில் சிறுமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென எழுந்து நின்று கீழே உள்ள தண்டவாளத்தில் 3 வயது சிறுமியை தள்ளிவிடுவது பதிவாகியுள்ளது, அத்துடன் இதனை கண்ட சுற்றி இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்ததும் பதிவாகியுள்ளது.
A 32-year-old Brianna Lace Workman arrested for shoving a 3-year-old child onto train tracks. Motives unknown except, Democrat hell-hole of Portland, Oregon. pic.twitter.com/w63DGDdCOL
— ??RealRobert?? (@Real_RobN) December 31, 2022
ரயில் பாதையில் விழுந்த சிறுமியின் முகம் தண்டாவளத்தில் இடித்தது, நல்ல வேளையாக அங்கிருந்தவர்களில் ஒருவர் அடுத்த ரயில் வருவதற்குள் சிறுமியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதில் சிறுமியின் தலையில் வலியும், நெற்றியில் இரத்தம் கசிவதற்கான சிவப்பு குறி காணப்பட்டது.
பெண்மணி கைது
இந்த சம்பவத்தை தொடர்ந்து 32 வயதான ப்ரியானா லேஸ் வொர்க்மேன் என்ற பெண் கைது செய்யப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்ட்னோமா மாகாண மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு பதிந்துள்ளது. அத்துடன் அந்த நபரை காவலில் வைத்திருக்கவும், ஜாமீன் இல்லாமல் வைத்திருக்கவும் கோருகிறது.