உலகில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும் முதல் நகரம் - அசைவத்திற்கு தடை
சைவ உணவை மட்டுமே பெறும் உலகின் முதல் நகரம் எது, எங்குள்ளது என்பதை இங்கே அறிந்துகொள்வோம்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலித்தானா நகரம் (Palitana), உலகிலேயே முதன்முறையாக மாமிசம் மற்றும் முட்டை விற்பனை, உணவுப்பயன்பாடு ஆகியவை முழுமையாக தடைசெய்யப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் சமண (Jain) சமுதாயத்தின் மத உணர்வுகளை மதித்து, அந்த புனித தலத்தின் தூய்மையை பாதுகாக்க அரசாங்கம் எடுத்த முக்கிய நடவடிக்கையாகும்.
பாலித்தானா நகரம் முக்கியமான சமண தீர்த்ததலம் என்பதால், உயிரினங்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க ஜெயின் சந்நியாசிகள் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
2014-ஆம் ஆண்டு, சுமார் 200 ஜெயின் சந்நியாசிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் அரசை இந்த முடிவை எடுக்கத் தூண்டியது.
இந்நகரத்தில் தற்போது மாமிசம், முட்டை விற்பனை மற்றும் விலங்குகளை அறுத்து உணவாக்குதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறும்வர்களுக்கு தண்டனை வழங்கப்படும்.
இதனால், பலர் உணவுச் சுதந்திரம் பாதிக்கப்படும் என விமர்சனம் தெரிவித்தாலும், சமய உணர்வுகள் மற்றும் சுற்றுலா வளர்ச்சி என இரு முனைகளிலும் விவாதங்கள் எழுந்துள்ளன.
பல புதிய சைவ உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், சைவ உணவுப் பரிமாற்றம் வளர்ந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Palitana meat ban news, Jain city vegetarian only, Worlds first vegetarian city, Gujarat Palitana non-veg ban, Palitana Jain pilgrimage food rules, Palitana tourism food policy, Vegetarian cities in India