உக்ரைனில் 75 மில்லியன் டன் உணவு தானியங்கள்: உலகின் தேவைகள் குறித்து ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!
கருங்கடலில் ரஷ்ய படைகளின் முற்றுகை தொடர்ந்தால் இலையுதிர் காலத்தில் உக்ரைனில் 75 மில்லியன் டன்கள் உணவு தானியங்கள் சிக்கி இருக்கலாம் என அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உலகளவில் கோதுமை ஏற்றுமதியிலிருந்து உரங்களின் ஏற்றுமதி வரை உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளும் முக்கிய ஏற்றுமதியாளராக திகழ்கின்றனர் மற்றும் உலகின் கோதுமை தேவையை மூன்றில் ஒருபங்கை இந்த இருநாடுகளும் தான் உற்பத்தி செய்து வருகின்றனர்.
அப்படி இருக்கையில், இருநாடுகளுக்கு இடையிலான போர் தாக்குதல் , நீண்ட காலப் போர் தாக்குதலாக மாறி இருக்கும் நிலையில், உலகின் உணவு தானிய (food grains)தட்டுப்பாடும், உணவுப் பொருள்களின் விலையேற்றமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், உக்ரைனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ரஷ்ய படைகள் கருங்கடலை தொடர்ந்து முற்றுகையிட்டால் இலையுதிர் காலத்தில் உக்ரைனில் 75 மில்லியன் டன் தானியங்கள் சிக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன்...ட்விட்டருக்கு எலான் மஸ்க் எழுதிய எச்சரிக்கை கடிதம்
அத்துடன் ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, தற்போது 22-25 மில்லியன் டன் தானியங்கள் வெளிநாட்டுகளுக்கு உக்ரைனால் அனுப்பமுடியவில்லை எனத் ஜெலென்ஸ்கி Zelensky மதிப்பிட்டுள்ளார்.
ஆனால் ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த வாரம் தெரிவித்த தகவலில், ரஷ்யா உக்ரைனின் உணவுத் தானிய ஏற்றுமதியை தடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்தார்.