ஐரோப்பிய நாடொன்றை அழைத்த ஜெலென்ஸ்கி..ஜனாதிபதியுடன் நேரில் சந்திப்பு
ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிய உக்ரேனியர்களுக்கு உதவியதற்காக கிரீஸ் நாட்டின் ஜனாதிபதிக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
ஜெலென்ஸ்கி நன்றி
ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பல நாடுகளுக்கு சென்று ஆதரவும், உதவியும் கோரி வருகிறார்.
அந்த வகையில் அவர் கிரீஸ் நாட்டின் ஜனாதிபதி காத்தரீனா சாகெள்ளரோபோலூவை சந்தித்து பேசினார் ஜெலென்ஸ்கி.
I met with @PresidencyGR Katerina Sakellaropoulou to thank Greece for helping Ukrainians who fled Russian aggression and the treatment of Ukrainian children who suffered from it. Invited Greece to take part in the recovery of Odesa, given the city’s special role in Greek history. pic.twitter.com/sHpRw3vJlC
— Володимир Зеленський (@ZelenskyyUa) August 21, 2023
அதன் பின்னர் அவர் வெளியிட்ட பதிவில், 'ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிய உக்ரேனியர்களுக்கு உதவியதற்காகவும், பாதிக்கப்பட்ட உக்ரேனிய குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்ததற்காகவும் கிரீஸுக்கு நன்றி தெரிவிக்க, கிரீஸின் ஜனாதிபதி காத்தரீனா சாகெள்ளரோபோலூவை சந்தித்தேன்.
கிரேக்க வரலாற்றில் நகரத்தின் சிறப்புப் பங்கைக் கருத்தில் கொண்டு, ஒடேசாவை மீட்டெடுப்பதில் பங்கேற்க கிரேக்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது' என தெரிவித்துள்ளார்.
கிரீஸ் ஜனாதிபதியின் பதிவு
இதேபோல் கிரீஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள பதிவில், 'உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை அதிபர் மாளிகைக்கு வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஐரோப்பா மற்றும் மேற்கு நாடுகளின் ஒரு அங்கமாக துணிச்சலான உக்ரேனிய மக்களுக்கு ஆதரவாக கிரீஸ் நிற்கிறது.
அத்துடன் அவர்களின் தாயகத்தின் சுதந்திரம் மற்றும் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறது. தூண்டப்படாத ரஷ்ய படையெடுப்பு சர்வதேச சட்டம், தாராளவாத ஜனநாயகம் மற்றும் ஐரோப்பிய மதிப்புகளுக்கு நேரடி சவாலாக உள்ளது' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |