உக்ரைனுக்கு 300 மில்லியன் வழங்கிய அமெரிக்கா - நெகிழ்ச்சியுடன் ஜெலென்ஸ்கி கூறிய விடயம்
ரஷ்யாவுக்கு எதிரான போரில் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவியளித்த அமெரிக்காவுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பதற்றம்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் ஒவ்வொரு நாளும் பதற்றத்தை உண்டாக்கி வருகிறது. ரஷ்ய படைகள் கீவினை தாக்குவதும், உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்துவதும் அரங்கேறி வருகின்றன.
AFP
ரஷ்யாவை எதிர்கொள்ள வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா தற்போது 300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவியை வழங்கியுள்ளது.
ALEX WONG
அமெரிக்காவுக்கு ஜெலென்ஸ்கி நன்றி
இதனை குறிப்பிட்டு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், '300 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவிப் பொதிக்கு அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ரஷ்யா ஏவுகணை மற்றும் ட்ரோன் பயங்கரவாதத்தில் இருந்து உக்ரைன் வானத்தைப் பாதுகாப்பதற்கும், உக்ரேனிய பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும் இது மிகவும் முக்கியமான மற்றும் சரியான நேரத்தில் உதவியாகும். அமெரிக்க ஆதரவு மற்றும் உக்ரேனிய - அமெரிக்க மூலோபாய கூட்டாண்மையின் வலிமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு' என தெரிவித்துள்ளார்.
We are grateful to ?? for the new defense assistance package worth $300 million. This is extremely important and timely assistance to protect ?? sky from Russian missile and drone terror, as well as to bolster the capabilities of the Ukrainian Defense Forces. Another example of…
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 31, 2023
Getty Images