இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு
ஈரானுக்கு எதிரான மோதலில் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையிலேயே, போரில் அமெரிக்காவும் தலையிட்டதாக ஈரானின் உயர் தலைவர் காமெனி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாழ்த்த விரும்புகிறேன்
இந்த வார தொடக்கத்தில் 12 நாட்கள் நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு, ஈரானின் உயர் தலைவர் அலி காமெனி வியாழக்கிழமை தனது முதல் பொது அறிக்கையில் இஸ்ரேலுக்கு எதிரான தனது நாட்டின் வெற்றியை பாராட்டினார்.
போலியான சியோனிச ஆட்சியை நேருக்கு நேர் எதிர்கொண்டு வென்றதற்காக... மாபெரும் ஈரானிய தேசத்தை நான் வாழ்த்த விரும்புகிறேன் என அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி தளங்களைத் தாக்கியது, ஆனால் அவர்களால் எதையும் சாதிக்க முடியவில்லை என்றும், ஈரான் அமெரிக்காவிற்கு மறக்க முடியாத அடி கொடுத்தது என்றும் காமெனி குறிப்பிட்டுள்ளார்.
My congratulations on our dear Iran’s victory over the US regime. The US regime entered the war directly because it felt that if it didn’t, the Zionist regime would be completely destroyed. It entered the war in an effort to save that regime but achieved nothing.
— Khamenei.ir (@khamenei_ir) June 26, 2025
இஸ்ரேல் அழிக்கப்படும்
மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், ஈரான் மீண்டும் அமெரிக்க தளங்களைத் தாக்கும் திறன் கொண்டது என்றும் அவர் அமெரிக்காவை எச்சரித்தார். மேலும், ஈரானுக்கு எதிராக ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், எதிரி நிச்சயமாக அதிக விலை கொடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா நேரடியாகப் போரில் நுழைந்தது என்பதை குறிப்பிட்ட காமெனி, அமெரிக்கா அவ்வாறு செய்யாவிட்டால், இஸ்ரேல் முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அமெரிக்கா உணர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டு நசுக்கப்பட்டது என்றும் காமெனி பதிவு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |