மலேசிய கடலில் 14 வயது பிரித்தானிய சிறுவன் உட்பட 4 பேர் மாயம்! தேடுதல் பணி தீவிரம்
மலேசிய கடற்பகுதியில் பிரித்தானியாவைச் சேர்ந்த இருவர் உட்பட மொத்தம் நான்கு முக்குளிப்போர் மாயமானதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவின் தெற்கு ஜோகூர் மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரமான மெர்சிங்கில் இருந்து சுமார் 10 மைல் தொலைவில் உள்ள புலாவ் டோகாங் சங்கோல் தீவில் நேற்று (ஏப்ரல் 6) டைவ் செய்யும் போது நால்வரும் காணாமல் போனதாக மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்களில் 14 வயது சிறுவன் உட்பட பிரித்தானியாவைச் சேர்ந்த இரண்டு பேர் மற்றும் 18 வயது பிரான்ஸ் பெண் மற்றும் நோர்வேயை சேர்ந்த 35 வயது பெண் அடங்குவர்.
புதன்கிழமை மதியம் உடனடியாக தேடுதல் பணி தொடங்கபட்டது, ஆனால் பார்வைக் குறைபாடு காரணமாக இரவு இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. மேலதிக விவரங்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.
உக்ரைன்-ரஷ்யா போரின் 43-வது நாள்: சமீபத்திய முக்கிய தகவல்கள்
Photo: EPA
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக மலேசியா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 1 அன்று வெளிநாட்டவர்களுக்கு அதன் எல்லைகளை மீண்டும் திறந்தது.
எல்லை திறக்கப்பட்ட முதல் நான்கு நாட்களில் 55,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மலேசியாவுக்குள் நுழைந்ததாக குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.
தரைமட்டமாக்கப்பட்ட மரியுபோல் நகரம்; 5000-க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்று குவித்த ரஷ்யா