சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் 20 ஈரானிய ட்ரோன்கள்: இரவோடு இரவாக உக்ரைன் கொடுத்த பதிலடி
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு களமிறக்கப்பட்ட 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் வான் தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில், ரஷ்ய அதிகமான வான் தாக்குதலை உக்ரைனிய குடியிருப்பு பகுதிகள் மீது நடத்தி வருகிறது.
இவற்றில் பெரும்பாலானவற்றை உக்ரைன் வான் தடுப்பு ஆயுதங்கள் மூலம் தடுத்து நிறுத்தினாலும், அவற்றில் சில ரஷ்ய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனிய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தி பலத்த சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன.
❗️Ukrainian Air Defence destroyed all 20 #Shahed drones and 2 #Kalibr cruise missiles launched by the Russians on the night of July 13, the Air Force reported. pic.twitter.com/OHDWCxdbFF
— KyivPost (@KyivPost) July 13, 2023
அவ்வாறு சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா ஈரானிய ட்ரோன்கள் மூலம் நடத்திய பயங்கர வான் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் படுகாயமடைந்தனர் என கீவ் ராணுவ நிர்வாகம் தகவல் தெரிவித்து இருந்தது.
சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை உக்ரைனிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய 20 ஈரானிய ட்ரோன்களையும் உக்ரைன் விமானப்படை இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தியுள்ளது.
இவற்றுடன் இரண்டு கலிபர் கப்பல் ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kyiv City Military Administration
உக்ரைனிய தலைநகரான கீவ் பிராந்தியம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் பெரும்பாலான ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்ட dShahed ஆகும் என உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |