அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு
அல்ஜீரியாவின் தங்கம் மற்றும் மார்பிள் கண்டுபிடிப்பு உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தளாக மாறியுள்ளன.
அல்ஜீரியாவின் தெற்குப் பகுதி, கடும் வறண்ட நிலங்களால் அறியப்படும் இடமாக இருந்தாலும், தற்போது உலகின் பொருளாதார செல்வாக்கை மாற்றக்கூடிய புதிய கனிமக் களஞ்சியங்கள் காரணமாக அதற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
Tamanrasset மாகாணத்தில் உள்ள Tirak மற்றும் Amesmessa தங்கக் கிடங்குகளில் 60 டன் தூய தங்கம் இருப்பதாக Sonarem நிறுவன தலைவர் Belkacem Soltani அறிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில், 60,000 டன் தங்கம் கொண்ட கனிமம் அகழப்பட்டு, 400 கிலோகிராம் தூய தங்கமாக மாற்றப்பட்டுள்ளது. இது அல்ஜீரியாவை ஒரு முக்கிய தங்க உற்பத்தியாளராக உருவாக்கும் பாதையை வகுக்கிறது.
மார்பிள் வளம் குறித்தும் மிகப்பாரிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 140 மில்லியன் கன மீட்டர் மார்பிள் வளம் இருப்பதாக கணிக்கப்படுகிறது.
இதனால், 290 மில்லியன் டொலர் மதிப்பிலான மார்பிள் இறக்குமதி தேவையை குறைத்து, உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க முடியும். தற்போது 15 இயக்கத்தில் இருக்கும் குவாரிகள் மூலம் 40 மில்லியன் கன மீட்டர் மார்பிள் பயன்படுத்தத்தக்க நிலையில் உள்ளது.
முன்பு, வெளிநாட்டு முதலீடுகளை கட்டுப்படுத்திய 49/51 விதி தற்போது நீக்கப்பட உள்ள நிலையில், அல்ஜீரியாவின் சுரங்கச் சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது. இதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் வாய்ப்பு உருவாகும்.
இந்த வளங்கள் அமெரிக்கா, சீனாவை கூட எதிர்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சிக்கு உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |