தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டு பழமையான தங்க மோதிரம்., பொறிக்கப்பட்டிருந்த இந்திய மொழி
தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2,000 ஆண்டு பழமையான தங்க மோதிரம், இந்தியாவுடனான பழங்கால தொடர்பை வெளிச்சமிட்டுள்ளது.
தாய்லாந்தின் பெட்சபுரி மாகாணத்தில் உள்ள டான் யாய் தொங் (Don Yai Thong) தொல்லியல் தளத்தில் சமீபத்தில் நடந்த அகழாய்வில், 2000 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
321 வைரம், 56 நீலக்கல், 13 மரகதம், 6 மாணிக்கம் பதித்த மோதிரம்- ட்ரம்புக்கு பரிசாக வழங்கிய பெல்ஜிய நிறுவனம்
இந்த மோதிரம், அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளுக்கு அருகே இருந்தது. மிக முக்கியமாக, அந்த மோதிரத்தில் பிராமி எழுத்து (Brahmi script) பொறிக்கப்பட்டிருந்தது.
அதில் “pusarakhitasa” எனும் வார்த்தை காணப்படுகிறது. இதன் பொருள் “Pushya நட்சத்திரத்தால் பாதுகாக்கப்பட்டவர்” என்று அர்த்தம். Pushya என்பது இந்திய ஜோதிடத்தில் புனிதமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா இடையே 2000 ஆண்டுகளுக்கு முன்பே வணிக மற்றும் கலாச்சார தொடர்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. தொல்லியல் நிபுணர்கள், அந்த மோதிரம் இந்திய வணிகருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என கருதுகின்றனர்.
அகழாய்வில் எட்டு மனித எலும்புக்கூடுகள், பானைகள், வெண்கலப் பொருட்கள், தங்க நகைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனால், அந்த இடம் செல்வந்தர்கள் அல்லது சமூகத்தில் உயர்ந்த நிலை பெற்றவர்களின் அடக்கம் செய்யப்பட்ட இடமாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த மோதிரம், இந்திய வணிகர்கள் தாய்லாந்து பகுதிகளுக்கு பயணம் செய்து அங்கு வாழ்ந்திருக்கலாம் என்பதற்கான சான்றாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை இணைத்த பழமையான கடல் வணிகப் பாதைகள் (Maritime trade routes) எவ்வளவு முக்கியமானவை என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்த சிறிய தங்க மோதிரம், ஆசியாவின் பழமையான வரலாற்றை புரிந்துகொள்ளும் விதத்தில் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இது, இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ஆழமான கலாச்சார உறவுகளை வெளிப்படுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |