புதிய பணத்தாள்களை வெளியிட்டுள்ள ஆசிய நாடு - தேசத் தந்தையின் புகைப்படம் நீக்கம்
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் புதிய பணத்தாள்களை வெளியிட்டுள்ளது.
வங்கதேச மத்திய வங்கி அண்மையில் வெளியிட்ட புதிய பணத்தாள்களில், அந்நாட்டின் தேசத் தந்தையாக போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் நீக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய மாற்றம், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸினா நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால ஆட்சி அமுலுக்கு வந்த பின்னர் ஏற்படுகிறது.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் (Sheikh Mujibur Rahman) வங்கதேசத்தின் முதல் ஜனாதிபதியாவார். ஷேக் ஹஸினா அவரது மகளாவார்.
புதிய வடிவமைப்பின் சிறப்பம்சங்கள்:
- புதிய பணத்தாள்களில் எந்த மனிதரின் படமும் இல்லை
- இந்து, புத்த கோவில்கள், வரலாற்று கோட்டைகள், இயற்கை காட்சிகள் இடம்பெற்றுள்ளன
- பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது நாட்டின் பஞ்சத்தை சித்தரிக்கும் மறைந்த ஓவியர் ஜைனுல் அபிதீனின் கலைப்படைப்புகளும் இடம்பெற்றுள்ளன
- சுதந்திரப் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவுச் சின்னம் இடம்பெற்றுள்ளன

12 புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உருவாக்க பிரித்தானியா திட்டம்: வேலைவாய்ப்பும் பாதுகாப்பும்...
பழைய பணத்தாள்களும் தொடரும்
முந்தைய ஷேக் முகிபுர் ரஹ்மான் படம் உள்ள பணத்தாள்களும், நாணயங்களும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசியல் பின் நிழல்கள்
1972-ஆம் ஆண்டு முதல் வெளியான நாணயங்களில் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படம் இடம்பெற்று வந்தது. BNP ஆட்சி காலத்தில் வரலாற்று தளங்கள் இடம்பெற்றன. தற்போது முடிவெடுக்கப்பட்ட மாற்றம், அவரின் குடும்பத்தின் அரசியல் தாக்கம் குறைவதைக் காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bangladesh new currency 2025, Sheikh Mujibur Rahman removed, Bangladesh banknotes without portraits, Muhammad Yunus caretaker govt, Bangladesh currency design change, Sheikh Hasina exile, Bangladesh political shift 2025, Hindu Buddhist sites in currency, Zainul Abedin famine artwork, Bangladesh new note controversy