ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல்; பொலிவியாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வி
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் (Bolivia) புதன்கிழமை நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியில் முடிந்தது.
தலைநகர் லா பாஸில் உள்ள ஜனாதிபதி மாளிகை மீது பொலிவிய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, ராணுவ உயர்மட்ட ஜெனரல் ஜோஸ் ஜூனிகா (Juan Jose Zuniga), சில ராணுவ வீரர்களுடன் ராணுவ வாகனத்தில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றார்.
ஆனால், 3 மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டார். இது பொலிவியன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
காணொளியின்படி, புதன்கிழமை பொலிவியன் பாதுகாப்புப் படையினர் நகரின் பிரதான சதுக்கத்தைச் சுற்றி வளைத்தனர்.
பின்னர், ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலை ராணுவ வாகனத்தைக் கொண்டு மோதி, ராணுவ படையினர் உள்ளே நுழைய முயன்றுள்ளனர்.
நாட்டில் ஜனநாயகத்தை மறுசீரமைக்க விரும்புவதாக கூறிய ராணுவ தளபதி ஜெனரல் ஹோஜய், அவர்கள் ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸை (Luis Arce) மதிப்பதாகவும், ஆனால் நாட்டின் அரசாங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் அரசுக்கு ஆதரவாக பொதுமக்கள் வீதியில் இறங்கினர். அவர்களைத் தடுக்க ராணுவ வீரர்களும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடிக்கப்பட்ட நிலையில், இது பொலிவியன் மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என ஜனாதிபதி Luis Arce தெரிவித்தார்.
ஜெனரல் கைது செய்யப்பட்ட பின்னர் முப்படைகளின் தளபதியை பதவி நீக்கம் செய்வதாக ஜனாதிபதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து, புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் ஜோஸ் வில்சன் சான்செஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சதிப்புரட்சியில் ஈடுபட்ட ஜெனரல் ஹோஜ் மற்றும் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அந்நாட்டின் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆர்ஸ் தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்!
ஜெனரல் ஜோஸ் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சி செய்யுமாறு ஜனாதிபதி ஆர்ஸ் தான் தன்னைக் கேட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நாட்டின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி தம்முடன் கலந்துரையாடியதாகவும், அரசாங்கத்திற்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானது, அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் பொதுமக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என கூறியதாக அவர்தெரிவித்துள்ளார். இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தால் அவரது புகழ் மேலும் அதிகரிக்கும் என்பதால் இவ்வாறு ஜனாதிபதியே திட்டமிட்டு செய்ததாக கூறியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்ட இராணுவ ஜெனரல்...
பொலிவியாவில் உள்ள உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, ஜெனரல் ஜோஸ் இந்த வாரம் அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் குறித்து அவர் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்ததாள், அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
200 ஆண்டுகளில் 190 ஆட்சிக்கவிழ்ப்புகள்
பொலிவியாவில் கடந்த 200 ஆண்டுகளில் 190 ஆட்சிக்கவிழ்ப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பொலிவியாவில் 12 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். நாட்டின் இடதுசாரி ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ், முன்னாள் ஜனாதிபதி மொராலஸால் அவருக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, கட்சியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக இருவருக்குள்ளும் போட்டி நிலவுகிறது. பொலிவியாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வருகிறது.
ஜனாதிபதி ஆர்ஸ் ஆட்சியில் இருக்கும் போது ஜனநாயகத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் லூயிஸ் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜெனின் அனெஸ் ஆகியோரை அவர் கைது செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Bolivia coup attempt fails, General Juan Jose Zuniga, Bolivia President Luis Arce