ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய ஏஜெண்டின் சதி! மன்னர் சார்லசை சந்தித்தபின் வெளியான விவரம்
போலந்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய ரஷ்ய ஏஜெண்ட் சதித்திட்டம் தீட்டியதாக, உக்ரைன் பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.
சதித்திட்டம்
உக்ரைனின் பாதுகாப்பு சேவைகளின் தலைவர், போலந்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய முறியடிக்கப்பட்ட சதித்திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டார்.
கீவ்வில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் SBU தலைவர் வாசில் மல்யுக் கூறும்போது, கடந்த ஆண்டு Rzeszow விமான நிலையத்தில் ஜெலென்ஸ்கியைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுவதில், போலந்து இராணுவர் வீரர் பாவெல் கே ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவைகளுடன் இணைந்து பணியாற்றியதாக தெரிவித்தார்.
மேலும், போலந்து ரஷ்ய உளவுத்துறை நிறுவனங்களால் அந்நபர் செயல்படுத்தப்பட்டதாகவும், ஸ்னைப்பர் துப்பாக்கியால் ஜெலென்ஸ்கியை நோக்கி அவர் சுடத் தயாராக இருந்ததாகவும் கூறினார்.
அத்துடன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை குறிவைக்க FPV ட்ரோனைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் அவர் ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டார்.
மன்னர் சார்லஸை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு
RBC உக்ரைனால் முதலில் அறிவிக்கப்பட்ட இந்த விவரங்கள், ஜெலென்ஸ்கி தனது ஜனாதிபதி ஜெட் விமானத்தில் சென்று பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்தித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு வெளிவந்தன.
முன்னதாக, தற்போது ஓய்வூதியம் பெறுபவராக உள்ள அந்நபர், உக்ரைன் உளவுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 2024யில் ரஷ்யாவால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக போலந்து வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், விமான நிலைய பாதுகாப்பு குறித்த தகவல்களை தனது ரஷ்ய கையாளுபவர்களுக்கு அனுப்ப அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
வழக்குரைஞர்களின் கூற்றுப்படி, அவர் விசாரணைக்காகக் காத்திருக்கிறார். மேலும், எட்டு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |