மொத்தமாக ஸ்தம்பித்த தென்னமெரிக்க நாடொன்று... அவசர நிலை பிரகடனம்
நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக 19 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து சிலியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
தலைநகர் சாண்டியாகோ உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் புதன்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மின்தடை காரணமாக 98 சதவீத மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
தெருவிளக்குகள் இருண்டதால் போக்குவரத்து குழப்பம் ஏற்பட்டது, அதே நேரத்தில் சுரங்கப்பாதை ரயில்கள் வேலை செய்யவில்லை என்ற தகவலும் வெளியானது. இந்த நிலையில் அந்தரத்தில் சிக்கிய ரோலர்கோஸ்டரில் இருந்து பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
மில்லியன் கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்லும் சாண்டியாகோ மெட்ரோ மூடப்பட்டது மற்றும் நிறுத்தப்பட்ட ரயில்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பலர் அத்தியாவசிய தேவைகளுக்காக கையில் பணம் இன்றி அவதிப்பட்டுள்ளனர்.
Norte Chico பகுதியில் அமைந்துள்ள அமைப்பில் ஏற்பட்ட துண்டிப்பு காரணமாக மின்வெட்டு ஏற்பட்டது என்றே நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட உதவுவதற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை களமிறக்கியுள்ளதாக உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
98.5 சதவீத மக்கள்
இரவு 10 மணி முதல் காலை ஆறு மணி வரை ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்கப் போவதாக உள்விவகார அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்துள்ளார். வடக்கு அரிகா மற்றும் பரினாகோட்டா பகுதிகள் முதல் தெற்கு லாஸ் லாகோஸ் பகுதி வரை மின்வெட்டால் பாதிக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:15 மணிக்கு நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு பதிவாகி, 98.5 சதவீத மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. சாண்டியாகோ பெருநகரப் பகுதியைச் சுற்றி குறைந்தபட்சம் 582,430 பேர் மின்சாரம் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதனிடையே, பல நகரங்கள் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்குள் மின்சாரம் திரும்பியதாக குறிப்பிட்டுள்ளனர். ரயில் சேவை இல்லாததால், பேருந்துகள் போதுமான அளவு நிரம்பியதால், மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது தாமதமாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |