28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பன்சி : துள்ளி குதித்து மகிழ்ந்த வீடியோ!
28 ஆண்டுகள் பிறகு முதல்முறையாக வானத்தை பார்த்த சிம்பான்சி துள்ளி குதித்து மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வெளியுலகைப் பார்த்து பிரமித்த சிம்பன்சி
நியூயார்க்கை தளமாக கொண்ட கலிபோர்னியா சரணாலய ஆய்வாகத்தில் வெனிலா என்ற சிம்பன்சி சுமார் 28 ஆண்டுகளாக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கலிபோர்னியா சரணாலயத்தில் அடைக்கப்பட்டிருந்த வெனிலா தற்போது புளோரிடா சரணாலயத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது, முதல்முறையாக வெளி உலகை பார்த்தது வெனிலா. முதலில் வெளியே வர தயக்கம் காட்டிய வெனிலா சிம்பன்சி, வெளியே வந்து ஆச்சரியமாக அங்கும், இங்கும் வியப்பாக வானத்தை பார்த்தது.
இதன் பின்னர் வெளியே வந்த வெனிலா மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஆரவாரம் செய்தது. மற்ற சிம்பன்சி குரங்குகளை வெனிலா கட்டித் தழுவி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
இது குறித்து மீட்புப் பணியாளர்கள் கூறுகையில், 28 வயதான வெண்ணிலா என்ற சிம்பன்சி புளோரிடாவில் உள்ள சரணாலயத்தில் முதன்முறையாக திறந்த வானத்தைப் பார்த்தபோது "பிரமிப்பில்" ஆழ்ந்தது என்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நெஞ்சம் மகிழ்ச்சியில் நனைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
????????? ?? ?????????? ???
— Fiorella Arcodia ???????? ?? (@FiorellaArcodi1) June 28, 2023
Questo è il momento commovente in cui lo scimpanzé Vanilla esplode di gioia vedendo il cielo per la prima volta dopo essere stato in gabbia per tutta la vita in un laboratorio sperimentale di NewYork pic.twitter.com/3mNjZaYCv2
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |