இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல்
இந்தியாவுக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு வரவிருந்த ஈரான் கச்சா எண்ணெய் சரக்கு, திடீரென சீனாவிற்கு திருப்பி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Ping Shun எனப்படும் 2002-ல் கட்டப்பட்ட Aframax எண்ணெய் கப்பல், 6 லட்சம் பீப்பாய் ஈரான் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றது.
கடந்த மூன்று நாட்களாக கப்பலின் இலக்கு, குஜராத்தின் வடிநார் துறைமுகமாகக் காட்டப்பட்டது. ஆனால் இந்திய கரையை அடையும்போது, கப்பலின் Automatic Identification System (AIS) திடீரென மாற்றப்பட்டு, இலக்கு சீனாவின் டோங்யிங் எனக் குறிப்பிடப்பட்டது.
வடிநாரில், ரஷ்யாவின் Rosneft ஆதரவு பெற்ற Nayara Energy நிறுவனத்தின் 2 கோடி டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அங்கு இந்த எண்ணெய் இறக்குமதி செய்யப்படவிருந்தது.

இந்த திடீர் மாற்றம் நிதி பிரச்சினைகளால் ஏற்பட்டதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விற்பனையாளர்கள், வழக்கமான 30-60 நாள் கடன் காலத்தை விட்டு விலகி, உடனடி அல்லது குறுகிய கால கட்டணங்களை கோரத் தொடங்கியதால், இந்திய வாங்குபவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.
அமெரிக்கா, ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு 30 நாள் தற்காலிக விலக்கு அளித்திருந்தது. அதன்படி, ஏற்கனவே கடலில் இருந்த ஈரான் எண்ணெய் சரக்குகளை வாங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 19-க்கு பிறகு இந்த விலக்கு முடிவடைகிறது.
இந்த சரக்கு இந்தியாவை அடைந்திருந்தால், 2019-க்கு பிறகு இந்தியா ஈரானில் இருந்து பெறும் முதல் அதிகாரப்பூர்வ கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகும்.
சீனாவுக்கு திருப்பப்பட்ட இந்த சரக்கு, இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் புதிய சவாலாக உருவாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |