சீனா-இலங்கை கூட்டு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - வலுப்பெறும் பொருளாதார உறவுகள்
இலங்கை மற்றும் சீனா இடையே இரண்டு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இலங்கையின் தலைநகரான கொழும்புவில் வியாழக்கிழமை நடைபெற்ற 8-வது சீனா-இலங்கை கூட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஆணைய கூட்டத்தில், இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
சீன வர்த்தக அமைச்சரான வாங் வென்டாவும், இலங்கை வர்த்தக அமைச்சரான வசந்த சமரசிங்கவும் இந்த கூட்டத்தை இணைந்து தலைமை தாங்கினர்.
இந்தக் கூட்டத்தில், Belt and Road Initiative (BRI) திட்டத்தில் உயர் தர ஒத்துழைப்பு, வர்த்தக வளர்ச்சி, முதலீட்டை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆழமான விவாதங்கள் நடைபெற்றன.
கையெழுத்தான 2 முக்கிய ஒப்பந்தங்கள்:
- வர்த்தகத்தை எளிதாக்க பணிக்குழு அமைப்பது தொடர்பான நினைவூட்டல் ஒப்பந்தம்.
- தொழில்துறை மற்றும் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
சீன அமைச்சர் வாங், இலங்கையின் தரமான பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். மேலும், பசுமை வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சீனா உறுதியளிக்கின்றது.
Tongfa Group எனும் சீன நிறுவனத்தின் துணைத்தலைவர் ஹுவாங் ஃபென், கொழும்பு போர்ட் சிட்டியில் முதலீட்டு வாய்ப்புகளை ஆய்வு செய்துள்ளார். 5-10 ஆண்டு Green Visa, வரிவிலக்கு உள்ளிட்ட சிறப்பம்சங்களை அவர் பாராட்டினார்.
இலங்கையின் விவசாய வளம் மற்றும் tuna மீன், பச்சை நண்டு, மாம்பழம் போன்றவற்றை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதில் எதிர்காலம் இருப்பதாக அவர் கூறினார்.
இந்த கூட்டமைப்பு, சீனா-இலங்கை இடையிலான புதிய பொருளாதார அத்தியாயத்தை தொடக்கி வைத்திருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
China Sri Lanka trade agreement 2025, Belt and Road Sri Lanka cooperation, Colombo Port City investment news, Sri Lanka China economic ties, Wang Wentao Sri Lanka visit, BRI new agreements 2025, Tongfa Group Sri Lanka investment, Sri Lanka sugar factory China, Sri Lanka green visa policy, Sri Lanka seafood exports to China