மொழிபெயர்ப்பால் ஹொட்டலில் எழுந்த குழப்பம்.., தவறாக கைது செய்யப்பட்ட சுற்றுலா பயணி
மொழிபெயர்ப்பால் ஹொட்டலில் எழுந்த பிரச்சனை காரணமாக சுற்றுலா பயணி ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
புகார் அளித்த ஹொட்டல்
அஜர்பைஜானைச் சேர்ந்த 36 வயதான ரஷிய பேச்சாளர் ஒருவர் லிஸ்பனில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்று மாதுளம் பழ சாற்றை ஆர்டர் செய்ய முயற்சித்தார்.
அப்போது அவர், போர்ச்சுகீசிய மொழியில் கூறுவதற்காக மாதுளை என்ற வார்த்தையை மொழிபெயர்ப்பு செய்து கூறினார். ஆனால், அது ஹொட்டல் ஊழியருக்கு தவறாக புரிந்துள்ளது. அதாவது மாதுளம் பழச்சாறு என்பதற்கு பதிலாக, கையெறி குண்டு என புரிந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த உணவக ஊழியர் கையெறி குண்டை காட்டி மிரட்டுவதாக கூறி பொலிஸில் புகார் அளித்தார்.
தவறாக கைது செய்யப்பட்ட சுற்றுலா பயணி
பின்பு, தகவலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சுற்றுலா பயணியை கைது செய்து, காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பொலிஸார், அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போதும் எந்த பொருள்களும் இல்லை.
இறுதியில், மொழிபெயர்ப்பு காரணமாக மட்டுமே இந்த பிரச்சனை எழுந்துள்ளது என்பதை கண்டறிந்த பொலிஸார் சுற்றுலா பயணியை விடுவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |