குளியலறையில் கமிலாவுடன் தொலைபேசியில் பேசிய சார்லஸ்! கோபத்தில் சண்டை போட்ட இளவரசி டயானா
வேல்ஸ் இளவரசராக இருந்தபொது மன்னர் சார்லஸ், தனது குளியல் அறையில் இருந்து காதலி கமிலாவுடன் தொலைபேசியில் பேசியதால், அவருக்கும் இளவரசி டயானாவுக்கும் சண்டை வந்துள்ளது.
சார்லஸின் குளியலறை உரையாடல்
இளவரசி டயானாவுடன் திருமண உறவில் இருக்கும்போது, அப்போது முன்னாள் காதலியாக இருந்த கமிலா பார்க்கருடன் குளியலறையில் இருந்தபடி பேசியுள்ளார் மன்னர் சார்லஸ்.
கமிலாவுடனான அவரது உரையாடல் காதில் விழுந்ததால், இளவரசி டயானா வேதனையடைந்தார். சார்லஸ் குளியல் அறையிலிருந்து வெளியே வந்ததும், அவர் பேசியத்தைக் கேட்டதாக கூறி சண்டை போட்டுள்ளார் டயானா.
Getty Images
மறைந்த இளவரசி டயானாவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஆண்ட்ரூ மார்டன், டயானாவுடனான உரையாடலை நினைவு கூர்ந்தார்.
டயானா சார்லஸுடன் சண்டை
[Pintrest
அப்போது, டயானா கூறியதாவது: "ஒருமுறை அவர் (சார்லஸ்) தனது கையடக்கத் தொகுப்பில் குளித்ததில் தொலைபேசியில், 'என்ன நடந்தாலும், நான் எப்போதும் உன்னை நேசிப்பேன்' என்று கூறினார்.
பின்னர் "நான் வாசலில் இருந்து நீங்கள் பேசியத்தைக் கேட்டேன், என்று நான் அவரிடம் சொன்னேன், இருவரும் மோசமாக சண்டை போட்டோம்" என்று கூறியதாக மார்டன் தெரிவித்தார்.
டயானா-சார்லஸ்-கமிலா
வேல்ஸ் இளவரசி டயானா 1992-ல் மன்னர் சார்லஸிடமிருந்து பிரிந்தார். இறுதியில் 1996-ல், பாரிஸில் ஒரு கார் விபத்தில் டயானா இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, தம்பதியினர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.
Shutterstock
பிறகு, சார்லஸ் மற்றும் கமிலா 2005-ல் திருமணம் செய்து கொண்டனர். அவரது மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி இருவரும் அரச திருமணத்தில் கலந்து கொண்டனர்.