பெற்றோர்களுக்காக கல்வி அமைச்சின் அதிரடி திட்டம் - நடைமுறைக்கு வந்துள்ள WhatsApp Update
தமிழக அரசு கல்வித் துறையை மேம்படுத்தும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் பெற்றோர்களை தொடர்புக்கொள்ள சிறந்த வழியாக WhatsApp மூலம் ஒரு அப்டேட் செய்யவுள்ளனர்.
கல்வி அமைச்சின் அதிரடி திட்டம்
"Department of School Education" என்ற பெயரில் புதிய தளம் ஒன்று உருவாக்கப்பட்டு, பெற்றோர்களின் தொலைபேசி எண்ணிற்கு நேரடியாக வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் ஒரு பிள்ளை பாடசாலைக்கு சேருவது முதல் பாடசாலையை விட்டு விலகும் வரை அனைத்து விதமான தகவலும் பகிரப்படும்.
இதற்காக முதலில் பெற்றோர்கள் நல்ல தொலைப்பேசியை வாங்க வேண்டும். அதில் WhatsApp பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்களின் தொலைபேசி எண்களை வாங்கி எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
எப்படி பதிவு செய்யலாம்?
https://emis.tnschools.gov.in/ இந்த இணையத்தளத்திற்கு சென்று, பிள்ளைகளின் வகுப்பாசிரியர்கள் பெற்றோர்களின் தொலைப்பேசி இலக்கத்தை பதிவு செய்கின்றனர்.
இதற்காக வரும் OTP எண்ணை நம்பிக்கையுடன் வகுப்பாசிரியருடன் பகிரிந்துக்கொள்ள முடியும் என அதிகாரிகள் பெற்றோருக்கு அறிவுருத்தி வருகின்றனர்.
ஜூன் 6 திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது. அதற்கு முதல் இந்த சேவையானது நடைமுறைக்கு வந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வகுப்பறையில் ஆசிரியர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்? பாடத்தை எப்படி கவனிக்கிறார்கள்? அசைன்மென்ட்களை எவ்வளவு நேரத்தில் முடிக்கிறார்கள்? ஒழுக்கம் எப்படி இருக்கிறது? வருகைப் பதிவேடு விவரங்கள்? பள்ளிக்கு வரும் நேரம்? தேர்வில் பெறும் மதிப்பெண்கள் எவ்வளவு? போன்ற விவரங்களை உடனடியாக தெரிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |