குழந்தைகளை பாதிக்கும் சமூக ஊடகங்கள்., புதிய சட்டம் கொண்டுவரும் ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், சமூக ஊடகங்களில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஆபத்துகளை குறைக்க புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
TikTok, Meta (Instagram, Facebook) போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் “அடிமைப்படுத்தும் வடிவமைப்புகள்” (Addictive Designs) இளைஞர்களின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
அவர், “இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களை அணுக வேண்டுமா என்பதே கேள்வி அல்ல; சமூக ஊடகங்கள் இளைஞர்களை அணுக வேண்டுமா என்பதே கேள்வி” என்று வலியுறுத்தியுள்ளார்.
தூக்கமின்மை, மனச்சோர்வு, கவலை, சுயதீங்கு, சைபர் புகழ்ச்சி, துஷ்பிரயோகம், தற்கொலை போன்ற ஆபத்துகள் வேகமாக அதிகரித்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

இந்த பிரச்சினைகளை சமாளிக்க Digital Fairness Act (DFA) என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது
இதில், சமூக ஊடகங்களில் உள்ள மனதை கவரும், அடிமைப்படுத்தும் அம்சங்கள் (endless scrolling, autoplay, push notifications) தடை செய்யப்படும். மேலும், AI பயன்பாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே Digital Services Act (DSA) மூலம் சட்டவிரோத மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்துகிறது. இப்போது DFA மூலம், குழந்தைகளின் கவனத்தை “வணிகப் பொருளாக” பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நார்வே, பிரான்ஸ், துருக்கி, பிரித்தானியா போன்ற நாடுகளும் இளைஞர்களின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை ஆராய்ந்து வருகின்றன. இதற்கு அவுஸ்திரேலியாவின் முன்னோடி நடவடிக்கை ஊக்கமாக உள்ளது.
இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டால், சமூக ஊடகங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |